பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

கிரீடம், மதராசப்பட்டினம், தலைவா என பல படங்களை இயக்கியவர் ஏ.எல்.விஜய். தற்போது ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு கதையில் தலைவி என்ற படத்தை இயக்கியிருக்கிறார். இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. நடிகை அமலாபாலை காதலித்து திருமணம் செய்து கொண்ட விஜய், அதன்பிறகு கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்தார். அதையடுத்து ஐஸ்வர்யா என்ற டாக்டரை 2019ல் இரண்டாவது திருமணம் செய்தார். இவர்களுக்கு கடந்த மே 30-ம்தேதி ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு துருவா என்று பெயர் வைத்துள்ளனர். துருவா பிறந்து ஓராண்டு நிறை வடைந்ததையொட்டி முதல் பிறந்தநாளை கடந்த மே 30-ந்தேதி அன்று தங்களது வீட்டில் டைரக்டர் விஜய் - ஐஸ்வர்யா தம்பதியினர் கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். அதுகுறித்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகின.