மீண்டும் தமிழ் படங்களில் கவனம் செலுத்தும் ரோஜா | சம்பளத்தை உயர்த்தினாரா ராஷ்மிகா மந்தனா | விஷால், சுந்தர். சி கூட்டணியின் 3வது படம்: கயாடு லோஹர் ஹீரோயின்? | உண்மையில் ஜனநாயகன், 'பகவந்த் கேசரி' ரீமேக்கா? | சரவண விக்ரம் ஹீரோவான முதல் படத்திலேயே ஹாட் முத்தக்காட்சிகள் | பிரபாஸ் நடிக்கும் 'தி ராஜா சாப்' என்ன மாதிரியான கதை? | ஐசியூவில் இயக்குனர் பாரதிராஜா: இப்போது அவர் உடல் எப்படி இருக்கிறது? | 2026 ஆரம்பமே அமர்க்களம் : முதல் வாரத்தில் 6 படங்கள் ரிலீஸ் | குழந்தைகளுக்கான அனிமேஷன் படம் 'கிகி & கொகொ' | அறிமுகப் படத்திலேயே 1000 கோடி, அதிர்ஷ்ட ஹீரோயினாக மாறிய சாரா |

‛‛குற்றம் செய்தவரை விட்டு விட்டு, பள்ளியை குறி வைப்பது ஏன்?'' என, நடிகர் விஷாலுக்கு, பா.ஜ., நிர்வாகியும் நடிகையுமான காயத்ரி ரகுராம் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை, கே.கே.நகரில் உள்ள பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன், மாணவியருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் அவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த விசாரணையை போலீசார் தீவிரமாக்கியுள்ளனர்.
இதுகுறித்து நடிகர் விஷால் டுவிட்டரில், ‛இந்த விஷயம் என்னை பயமுறுத்துகிறது. பத்மா சேஷாத்ரி பள்ளி மூடப்பட வேண்டும் என்பதை இதுபோன்ற சம்பவங்கள் உணர்த்துகின்றன. கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும்' என, பதிவிட்டார்.
விஷாலின் இப்பதிவுக்கு கண்டனம் தெரிவித்துள்ள நடிகையும், பா.ஜ., நிர்வாகியுமான காயத்ரி ரகுராம் அளித்த பேட்டி: பெண்களுக்கான பாலியல் குற்றங்களுக்கு, குரல் கொடுப்பதில் நான் முன் வந்து நிற்பேன். எனக்கும் அந்த பள்ளிக்கு எந்த உறவும் இல்லை. நான் கேட்பதெல்லாம், குறிப்பிட்ட நபரின் குற்றச் செயல்களுக்கு, அப்பள்ளியை முன்னிருத்துவது ஏன்?
விஷாலின் டுவிட்டர் பதிவில், குற்றவாளியின் பெயரை விட்டுவிட்டு, அப்பள்ளியின் பெயரை மட்டும் பதிவிடுகிறார். அவர் மட்டுமல்ல பலரும் அப்பள்ளியையே குறி வைக்கின்றனர். இது குறிப்பிட்ட நபர் மீதான புகார் என்பதையும் தாண்டி, ஒரு சமூகத்தை முடக்கப்பார்க்கும் செயலாகவே தெரிகிறது.
இதுபோன்ற நடவடிக்கை அப்பள்ளியில் பயிலும், பணியாற்றும் பல்லாயிரக்கணக்கானவர்களின் வாழ்க்கையை பெரிதும் பாதிக்கும். திரையுலகில் ஒரு நடிகைக்கு பாலியல் தொல்லை நேர்ந்தால் அதற்காக சினிமாவையே விஷால் முடக்கி விடுவாரா? முதலில் விஷால், சினிமாவில் நடக்கும் பாலியல் துன்புறத்தல்களை கண்டித்து தடுக்க வேண்டும். சினிமாவில் பெண்கள் உதவி நாடி வந்த போது, அங்கு விஷால் ஹிரோயிசத்தை காட்டியிருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.