நம்ப முடியவில்லை : ‛கீதா கோவிந்தம்' குறித்து ராஷ்மிகா மகிழ்ச்சி பதிவு | 78 கோடியில் சொகுசு பங்களா வாங்கிய தனுஷ் பட நடிகை | அஜித் 64வது படம் எந்த மாதிரி கதை : ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட தகவல் | கூலி படத்தில் அமீர்கானை வீணடித்து விட்டார்கள் : ரசிகர்கள் ஆதங்கம் | ஆகஸ்ட் 22-ல் ஓடிடியில் வெளியாகும் தலைவன் தலைவி | லிவ்-இன் உறவுகள் பெண்களுக்கு தீங்கு விளைவிக்கும் : கங்கனா | அப்படி நடித்ததால் ரசிகர்கள் வெறுத்தனர் : அனுபமா பரமேஸ்வரன் | சினிமாவில் 50... வாழ்த்திய பிரதமர் மோடி : நன்றி தெரிவித்த ரஜினி | கூலி படத்தில் மிரட்டிய சவுபின் ஷாகிர், ரச்சிதா ராம் : இவங்க பின்னணி தெரியுமா? | சில கோடி செலவில் ‛கேப்டன் பிரபாகரன்' ரீ ரிலீஸ் : கில்லி மாதிரி வெற்றியை கொடுக்கமா? |
கொரோனா இரண்டாவது அலைக்கு தமிழகமும் அதிக பாதிப்பை சந்தி்த்துள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த உதவிடும் வகையில் திரைப்பிரபலங்கள் பலரும் முதல்வரின் நிவாரண நிதிக்கு பணம் அளித்து வருகின்றனர். ரஜினி, அஜித், சூர்யா குடும்பத்தினர், விக்ரம், சிவகார்த்திகேயன், ஷங்கர், முருகதாஸ், ஐஸ்வர்யா ராஜேஷ், நிதி அகர்வால் உள்ளிட்ட பலர் நிதி உதவி அளித்துள்ளனர்.
இந்நிலையில் பிரபல தயாரிப்பாளரும், வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தருமான டாக்டர் ஐசரி கணேஷ், தனது மனைவி ஆர்த்தி , மகள் பிரீத்தா ஆகியோருடன் முதல்வர் ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் சந்தித்தார். அப்போது தங்கள் சார்பில் கொரோனா நிவாரணப் பணிக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ஒரு கோடியே ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.