ரூ. 300 கோடி வசூலை நோக்கி நகரும் மகாவதார் நரசிம்மா | 'டியூட்' தீபாவளி ரிலீஸ் என மீண்டும் அறிவிப்பு : ஆக., 28ல் முதல் பாடல் | இந்த நடிகை என்னுடன் நடிப்பதற்காக பூஜை, பிரார்த்தனை செய்தேன் : அனுபமா பரமேஸ்வரன் | விஜய் பேச மாட்டார்... அஜித் பேசவே மாட்டார் : ஏ.ஆர் முருகதாஸ் | கேரள அரசு போக்குவரத்து ... மலரும் நினைவுகளில் மோகன்லால் | கைதி 2 படத்திற்கான கால்ஷீட்டை சுந்தர்.சிக்கு கொடுத்த கார்த்தி | அட்ரஸ் இல்லாத லெட்டருருக்கு நான் ஏன் பதில் போடனும்? விஜய்யின் பேச்சுக்கு கமல் பதில் | கார்த்தியின் படத்தில் வில்லனாக நடிக்கும் ஆதி | விஜயகாந்த் பற்றி விஜய்யின் 'அண்ணன்' பேச்சு : மகன் சண்முக பாண்டியன் சொன்ன பதில் | 300 கோடி வசூல் கடந்தும் நஷ்டத்தை சந்திக்கும் 'வார் 2' |
தமிழ்த் திரையுலகில் சில வெற்றிகரமான படங்களைக் கொடுத்த இயக்குனர் எஸ்ஜே சூர்யா, தற்போது கதாநாயகனாக, வில்லனாக, குணச்சித்ர நடிகராக சில படங்களில் நடித்து வருகிறார். அவருடைய நடிப்புக்கெனவும் தனி ரசிகர்கள் உருவாகி விட்டார்கள். அது 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்தில் நன்றாகவே எதிரொலித்தது.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, எஸ்ஜே சூர்யா, பாபி சிம்ஹா, அஞ்சலி, கமலினி முகர்ஜி, பூஜா தேவரியா மற்றும் பலர் நடித்த 'இறைவி' படம் வெளிவந்து இன்றுடன் ஐந்து ஆண்டுகள் ஆகியுள்ளது.
அப்படத்தை நினைவு கூர்ந்து படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ், 'இறைவி 5 வருடங்கள், என் மனதுக்கும், பலரது மனதுக்கும் எப்போதும் நெருக்கமான ஒரு படம். சீன் ஆர்டரின் முதல் வடிவ கடைசி பக்கம் இதோ” என படத்திற்காக எழுதிய அந்த கடைசி பக்கத்தையும் டுவீட் செய்திருந்தார்.
அதற்கு பதிலளித்துள்ள எஸ்ஜே சூர்யா, “இப்படம் நமது சினிமா உலகத்தில் ஒரு மைல் கல்லான படம், நன்றி இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ். இப்படத்தில் என்னையும் தேர்வு செய்து ஒரு பார்ட்டாக இருக்க வைத்தீர்கள். அந்த ரயில்வே ஸ்டேஷன் காட்சியை நீங்கள் படமாக்கிய அந்த நாளை இன்னும் மறக்க முடியாது,” என படத்தின் கிளைமாக்ஸ் காட்சி பற்றி குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வாரம் 'குஷி' படம் பற்றி ரசிகர் ஒருவரின் கேள்விக்கு அப்பட கிளைமாக்ஸ் பற்றி அவர் சொன்னது வைரலானது. இப்போது 'இறைவி' படத்தின் கிளைமாக்ஸ் பற்றியும் அவர் சொல்லியிருக்கிறார். இரண்டு படங்களிலும் கிளைமாக்ஸ் காட்சி ரயில்வே ஸ்டேஷன் சம்பந்தப்பட்டுள்ளது என்பது ஓர் ஒற்றுமை.