ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
தி பேமிலிமேன் 2 வெப்சீரிஸ் வெளியாகி விட்டதை அடுத்து தான் ஏற்கனவே நடித்து வந்த சகுந்தலம் புராண படத்தில் கவனத்தை திருப்பியிருக்கிறார் சமந்தா. குணசேகர் இயக்கும் இந்த படத்தில் மலையாள நடிகர் தேவ்மோகன் நாயகனாக நடிக்கிறார்.
மேலும், சகுந்தலம் படத்தின் படப்பிடிப்பு மே 10ம் தேதி வரை சுமார் 50 நாட்கள் நடைபெற்றுள்ளது. கொரோனா தொற்று தீவிரமானபோது படப்பிடிப்பில் கலந்து கொள்ள சமந்தா தயங்கியதால் பல நாட்களில் சமந்தா இல்லாமலேயே காட்சிகள் படமாகி வந்தது. அதோடு இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் 10 நாட்கள் நடைபெற்றுள்ளது.
இந்த நிலையில் தற்போது இப்படத்திற்காக ஐதராபாத்தில் பிரமாண்ட செட் உருவாக்கப்பட்டு வரும் நிலையில் கூடிய சீக்கிரமே மீண்டும் சகுந்தலம் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறாராம் சமந்தா. அதோடு, வழக்கமான படப்பிடிப்புகளை போல் அல்லாமல் காலை 6 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1 மணி வரை மட்டுமே படப்பிடிப்பை நடத்தவும் திட்டமிடப் பட்டுள்ளதாம்.