தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
சந்தானம், சூரி ஆகியோர் கொடுத்த இடைவெளியால், உள்ளே நுழைந்து குறுகிய காலத்தில் முன்னணி நகைச்சுவை நடிகராக வளர்ந்தவர் யோகிபாபு. ரஜினிகாந்த், அஜித், விஜய் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து காமெடி காட்சிகளில் நடித்தவர், சில படங்களில் கதையின் நாயகனாவும் நடித்து வருகிறார். இந்தநிலையில் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தில் யோகிபாபுவும் நடிக்கிறார்.
ரசிகர் ஒருவர் யோகிபாபுவின் டுவிட்டர் பக்கத்தில் இதுகுறித்து எழுப்பிய கேள்விக்கு 'ஆமாம்ப்பா' என பதிலளித்து இதை உறுதி செய்துள்ளார் யோகிபாபு. நெல்சன் திலீப்குமாரின் முதல்படமான கோலமாவு கோகிலாவில் கதையின் நாயகனாக யோகிபாபு நடித்திருந்தார் என்பதும், மெர்சல், சர்கார் மற்றும் பிகில் ஆகிய படங்களை தொடர்ந்து விஜய்யுடன் நான்காவது முறையாக இவர் இணைந்து நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.