தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
தமிழகத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள 'தி பேமிலி மேன் 2' படத்தில் நடித்ததற்காக நடிகை சமந்தா சினிமாவை விட அதிக சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்திற்காக மனோஜ் திவாரி 10 கோடி ரூபாயும், சமந்தா 3 அல்லது 4 கோடி ரூபாயும், பிரியாமணி 80 லட்ச ரூபாயும் சம்பளம் வாங்கியுள்ளதாகச் சொல்கிறார்கள்.
சமந்தா ஒரு தெலுங்குப் படத்தில் நடிப்பதற்காக அதிகபட்சமாக 1.5 கோடி தான் வாங்குவாராம். ஆனால், ஒரு வெப் தொடருக்காக இரண்டு மடங்கு சம்பளம் வாங்கியுள்ள தகவல் திரையுலகில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சினிமாவை விட வெப் தொடர்களில் அதிக சம்பளம் கிடைத்தால் நடிகைகள் பலரும் அதில் நடிக்க அதிக ஆர்வம் காட்டுவார்கள். சமீப காலங்களில் காஜல் அகர்வால், தமன்னா, வாணி போஜன் உள்ளிட்ட நடிகைகள் வெப் தொடர்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்பெல்லாம் சினிமாவில் வாய்ப்பில்லாமல் போனால் தான் டிவி தொடர்கள் பக்கம் போவார்கள். ஆனால், இப்போது சினிமாவில் வாய்ப்பிருந்தாலும் அதிக சம்பளம் காரணமாகவே முன்னணி நடிகைகளும் வெப் தொடர்கள் பக்கம் போகிறார்கள் என திரையுலகத்தில் சொல்கிறார்கள்.