இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
தனுஷ் இயக்குனராக அறிமுகமான 'பவர் பாண்டி' படத்தில் தனுஷ் எழுதி ஷான் ரோல்டன் இசையமைத்த 'வெண்பனி மலரே..' பாடல் அப்போது சூப்பர் ஹிட்டான ஒரு பாடலாக அமைந்தது. இப்பாடல் 3 வெர்ஷன்களில் வெளியானது. ஷான் ரோல்டன், ஸ்வேதா மோகன், தனுஷ் ஆகியோர் தனித்தனியாகப் பாடியிருந்தார்கள். இப்போதும் இந்த மெலடி பாடல்களை ரசிகர்கள் ரசித்து வருகிறார்கள்.
நேற்று இப்பாடலைப் பற்றி நினைவு கூர்ந்த ஷான் ரோல்டன், “என் குரல் மற்றும் பியானோ. இந்தப் பாடலை எனக்கு மறக்க முடியாத ஒன்றாக மாற்றிய மிக அழகான ரசிகர்களுக்காக இதை அர்ப்பணிக்கிறேன்,” என அவரே பியானாவில் வாசித்து பாடலைப் பாடி வீடியோ ஒன்றை வெளியிட்டார். “தனுஷ் கொஞ்ச நாட்களுக்கு படத்தை இயக்க மாட்டார், இந்தப் படம் அடுத்த பத்து வருடங்களுக்கு எனக்கு நிறைய ஞாபகப்படுத்தும். அனைவருக்கும் நன்றி“, என்றும் குறிப்பிட்டிருந்தார்.
அவரது பதிவுக்கு தனுஷ், “இதற்கு நீங்கள்தான் காரணம், நன்றி” என பதிலளித்துள்ளார். மேலும் இப்படத்தில் நடித்த பிரசன்னா மற்றும் பலரும் வீடியோவைப் பாராட்டி கமெண்ட் செய்துள்ளனர்.
தனுஷ் மீண்டும் படம் இயக்கினால் அப்படத்திற்கு ஷான் ரோல்டன் தான் கண்டிப்பாக இசையமைப்பார் என்பது ரசிகர்களின் கணிப்பு.