'பென்ஸ்' படத்தில் இணையும் ஹரிஷ் கல்யாண், மூன்று நாயகிகள் | ஆண்கள் பார்வையில் வெளியான குடும்ப வன்முறை படம் ; கண் கலங்கிய நடிகர் பாலா | பாலகிருஷ்ணா பிறந்தநாளில் வெளியான ‛அகண்டா 2' அறிமுக டீசர் | தந்தையின் இறுதிச்சடங்கு.. ஸ்ட்ரெச்சரில் வந்த தாய் ; கதறியழுத வில்லன் நடிகர் | வெற்றிமாறனை சுற்றி வரும் வதந்திகள், பதில் சொல்வாரா ? | நயன்தாரா படத்தை தொடர்ந்து திலீப் படத்தை இயக்கும் வாரிசு நடிகர் | செல்வத்தைத் தருவாரா 'குபேரா' ? திரையுலகம் எதிர்பார்ப்பு… | ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு |
காவல்துறையில் பணியாற்றும் பெண் காவலர்களை சாலை பாதுகாப்பு பணிகளில் ஈடுபட வைப்பதால் அவர்கள் பெரிதும் சிரமப்பட்டு வந்தார்கள். இப்படியான நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பெண் போலீசாரை சாலை பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று ஒரு ஆணை பிறப்பித்துள்ளார்.
இதையடுத்து நடிகர் ராகவா லாரன்ஸ் தனது டுவிட்டரில் ஒரு பதிவு போட்டுள்ளார். அதில், சாலை பாதுகாப்பு பணியில் இருந்து பெண் காவலர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருப்பதாக அறிந்தேன். பலமுறை நான் என் தாயுடன் பயணம் செய்யும்போது இவ்வாறு பாதுகாப்பு பணியில் இருக்கும் பெண்கள் இயற்கை உபாதைகள் மற்றும் அவசர தேவைகளுக்காக என்ன செய்வார்கள் என்று என் அம்மா என்னிடம் சொல்லி வருத்தப்பட்டிருக்கிறார்கள். நானும் வருந்தியிருக்கிறேன். அந்த வகையில் இந்த ஆணையைக் கண்டு மனநிம்மதி அடைகிறேன். முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி என பதிவிட்டுள்ளார் ராகவா லாரன்ஸ்.
அதேபோல் இதே பிரச்சினையை மையமாக வைத்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கூட பிரியங்கா நடிப்பில் மிக மிக அவசரம் என்ற பெயரில் ஒரு படம் இயக்கியிருந்தார். அதில் சாலை பாதுகாப்பு பணியில் இருக்கும் பெண் காவலர் எவ்வளவு கஷ்டப்படுகிறார் என்பதை அழுத்தமாக பதிவு செய்திருந்தார்.
அவர் வெளியிட்டுள்ள செய்தியில், பெண் போலீசாரை சாலையோர பணிகளில் ஈடுபடுத்த வேண்டாம் என்று அறிவித்திருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். படைப்புகள் என்பது பொழுபோக்கு மட்டுமல்ல, அதைத்தாண்டி இந்த சமூகத்தில் எத்தகையை மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பது மிக முக்கியம். அந்த வகையில் மிக மிக அவசரம் படத்தை இயக்கியதற்காக நான் பெருமைப்படுகிறேன் என்றும் தெரிவித்துள்ளார் சுரேஷ்காமாட்சி.