ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் |
தமிழில் சிம்பு கதாநாயகனாக அறிமுகமான 'காதல் அழிவதில்லை' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சார்மி. அதன் பின் பல தெலுங்குப் படங்களில் நடித்து அங்கும் முன்னணி நடிகையானார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு நடிப்பிற்கு முழுக்கு போட்டுவிட்டு, திரைப்படத் தயாரிப்பாளராக மாறினார்.
சார்மி செல்லமாக வளர்க்கும் நாயின் பெயர் 'ஐட்டம்'. தமிழில் 'சுல்தான்' படம் மூலம் அறிமுகமான ராஷ்மிகா மந்தானா வளர்க்கும் நாயின் பெயர் 'ஆரா'.
சார்மி அவருடைய நாயை தன்னுடைய குழந்தை என்றும், தன்னை அம்மா என்றும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு அந்த நாயின் மீது அளவிலாத அன்பு வைத்துள்ளார். அது போலவே ராஷ்மிகாவையும் 'அம்மா' எனக் குறிப்பிட்டுள்ளார்.
ராஷ்மிகாவும், சார்மியும் தற்போது நல்ல தோழிகளாகி விட்டார்களாம். இருவரும் அவர்களது செல்ல நாய்க்குட்டிகளுடன் சந்தித்த போது, அந்த நாய்களும் அன்பைப் பரிமாறிக் கொண்டுள்ளன.
அந்த சந்திப்பு பற்றி சார்மி, “ஆரா, ஐட்டமை சந்தித்த போது... புதிய அம்மா ராஷ்மிகாவுக்கு வாழ்த்துகள். உங்களது குழந்தை மிகவும் அபிமான தேவதையாக இருக்கிறது. உங்களை எங்களது மும்பைக்கு வரவேற்கிறோம்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஹிந்தியில் அமிதாப்புடன் நடிக்கும் 'குட் பை' படத்திற்காக மும்பை சென்றுள்ளார் ராஷ்மிகா.