தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
ஆடுகளம் படம் மூலம் தமிழில் அறிமுகமாகி ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக மாறியவர் நடிகை டாப்ஸி. தற்போது தெலுங்கு மற்றும் ஹிந்தியில் பிஸியான நடிகையாகவும் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் நடித்து வருகிறார். இந்த நிலையில், தனது திருமணம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ள டாப்ஸி தற்போதைக்கு திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் தனக்கு இல்லை என எல்லா கதாநாயகிகளை போலவே வழக்கமான பதிலை அளித்துள்ளார்.
அதேசமயம் இன்னொரு தகவலையும் அவர் கூறியுள்ளார், அதாவது எப்போது, தான் வருடத்திற்கு 2 படங்களில் மட்டும் நடிக்கும் அளவிற்கு நிலைமை மாறுகிறதோ, அப்போது திருமணம் செய்து கொள்வேன் என்றும் கூறியுள்ளார். ஆனால் தற்சமயம் கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு ஐந்து முதல் ஆறு படங்களில் அவர் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.