பிரதமர் மோடி உடன் நடிகர் கமல் சந்திப்பு : கீழடி பற்றி கோரிக்கை | கூலி படத்தில் பிரீத்தி கதாபாத்திரம் கொல்லப்படுகிறதா? : ஸ்ருதிஹாசன் பதில் | இட்லி கடை படத்தின் இசை வெளியீடு எப்போது? | சிவகார்த்திகேயன் படங்களுக்கு தொடர்ந்து இசையமைக்கும் சாய் அபயன்கர் | ஹீரோவாக அறிமுகமாகும் ஷங்கரின் மகன் | இந்த வாரம் ஆக்கிரமிக்க போகும் ஓடிடி ரிலீஸ்..! | 'கிங்டம்' படத்திற்கு பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவு | புதுமுகங்களுடன் இணைந்த சோனியா அகர்வால் | பிளாஷ்பேக் : இசை அமைப்பாளர் மலேசியா வாசுதேவன் | பிளாஷ்பேக் : ஒரே படத்தில் 5 பாடல்களுக்கு நடனமாடிய லலிதா, பத்மினி |
கொரோனாவால் மரணிக்கும் திரைப்பிரபலங்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. இன்று(ஜூன் 17) தொரட்டி படம் நாயகன் ஷமன்மித்ரு (வயது 43) காலை 6 மணிக்கு உயிரிழந்தார்.
சென்னை திரைப்பட கல்லூரியில் படித்து தங்க பதக்கம் வென்ற மாணவரான ஷமன்மித்ரு தமிழ், தெலுங்கு , கன்னட படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். தன்னை முழுமையாக அடையாளப்படுத்தி கொள்ள தொரட்டி படத்தை தயாரித்து, கதாநாயகனாக நடித்து வெற்றி பெற்றார். இப்படம் விமர்சகர்கள் மத்தியிலும் பாராட்டை பெற்றது. அடுத்த படத்திற்கான வேலைகளில் ஈடுபட்டு இருந்தார்.
இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக கடந்த ஒரு மாத காலமாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தவர் இன்று சிகிச்சை பலன் இன்றி காலமானார். இவருக்கு சகுந்தலா என்ற மனைவியும், 5 வயதில் மோக்ஷா என்ற பெண் குழந்தையும் உள்ளனர்.
கே.வி.ஆனந்த், மாறன், சேலம் சந்திரசேகர், பாண்டு, குட்டி ரமேஷ், நிதிஷ் வீரா, வெங்கட் சுபா உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் கொரோனாவால் மரணம் அடைந்த நிலையில் இப்போது இவரின் மரணமும் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.