பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட சினிமாவில் நூற்றுக்கணக்கான படங்களில் குணசித்ர வேட்களில் நடித்திருப்பவர் கவிதா. 1976ம் ஆண்டு வெளியான ஓ மஞ்சு என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர். தமிழில் ஆட்டுக்கார அலமேலு, காற்றினிலே வரும் கீதம், அந்தமான் காதலி, அல்லி தர்பார், நாடோடி தென்றல், வைதேகி கல்யாணம், நட்சத்திர நாயகன், செந்தமிழ் பாட்டு என பல படங்களில் நடித்துள்ளார்.
தற்போது சினிமா மட்டுமின்றி சின்னத்திரை சீரியல்களிலும் நடித்து வருகிறர். கங்கா, நந்தினி தொடர்களில் நடித்திருக்கிறார். தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என்றென்றும் புன்னகை சீரியலில் நடித்து வருகிறார்.
நடிகை கவிதாவின் வாழ்க்கையில் இது மிகவும் சோகமான காலமாகிவிட்டது. கொரோனா ஊரடங்கு தொடங்கியதுமே படப்பிடிப்பு எதிலும் கலந்து கொள்ளாமல் வீட்டிலேயே இருந்தார். என்றாலும், கவிதாவின் மகன் சாய் ரூப், கணவர் தசரத ராஜ் ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இருவரும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி கவிதாவின் மகன் சாய் ரூப் மரணமடைந்தார். அவரது கணவர் தசரதராஜ் தீவிர சிகிச்சையில் உள்ளார். மகன் மரணம், கணவர் கவலைக்கிடம் என்கிற நிலையில் சின்னத்திரையுலகினர் அவருக்கு ஆறுதல் சொல்லி வருகிறார்கள்.