ஆதங்கப்பட்ட அனுபமா பரமேஸ்வரன்... : சமாதானப்படுத்திய சுரேஷ் கோபி | நடிகை காவ்யா மாதவனின் தந்தை காலமானார் | 39வது பிறந்தநாள் கொண்டாடிய அஞ்சலி | அரசியல் என்ட்ரி : இளம் நடிகை அனந்திகாவின் ஆசை | அடுத்தடுத்து மூன்று பான் இந்தியா படங்களின் முன்னோட்ட வீடியோ போட்டி | மீண்டும் திரைக்கு வருகிறது அருண் விஜய்யின் “தடையறத் தாக்க” | விஜய் சேதுபதி படத்தில் சம்யுக்தா | 'தி ராஜா சாப்' டீசர் : தன் முந்தைய சாதனையை முறியடிக்காத பிரபாஸ் | நா.முத்துக்குமாருக்கு கரும்பு பிடிக்காதது ஏன் | ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அடுத்தடுத்து வெளியாக போகும் படங்கள் |
கொரோனா இரண்டாவது அலை பரவிக் கொண்டிருந்தபோதும் ரஜினியின் அண்ணாத்த படத்தை ஐதராபாத்திலுள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் பாதுகாப்பான முறையில் சிறப்பு அனுமதி பெற்று படமாக்கினர். அந்த படத்தில் தனக்கான காட்சிகளில நடித்து முடித்து விட்டே சென்னை திரும்பினார் ரஜினி.
அதையடுத்து ஆந்திராவில் கொரோனா இரண்டாவது அலை வேகமெடுத்ததால் சிரஞ்சீவி, ராஜ மவுலி, மகேஷ்பாபு, பிரபாஸ் என பலரது படங்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. தற்போது மீண்டும் படப்பிடிப்புகள் அங்கு துவங்கி உள்ளன. தமிழகத்தில் படப்பிடிப்பு துவங்கு இன்னும் அனுமதி கிடைக்காததால் இங்குள்ள பல நடிகர்கள் ஐதராபாத்தில் படமாக்க முடிவு செய்துள்ளனர். தற்போது விஷாலின் 31வது படத்தின் படப்பிடிப்பு அங்குள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது.
இதையடுத்து சூர்யா, கார்த்தி போன்ற தமிழ் நடிகர்களின் புதிய படங்களின் படப்பிடிப்புகளையும் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடத்த தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். மேலும், சில ஹிந்தி, கன்னட படங்களின் படப்பிடிப்புகளும் கூட இந்த பிலிம் சிட்டியில் விரைவில் நடைபெற உள்ளதாம். ஆக, ராமோஜிராவ் பிலிம்சிட்டி ஹாட் சிட்டியாக மாறிக் கொண்டிருக்கிறது.