பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

தெலுங்கில் தற்போது ஆச்சார்யா படத்தில் நடித்து வரும் சிரஞ்சீவி இன்னும் சில காட்சிகளில் நடித்தால் அவரது வேலை முடிந்துவிடும். இதையடுத்து அவர் நடிப்பதற்காக இரண்டு ரீமேக் படங்கள் காத்திருகின்றன. ஒன்று மலையாளத்தில் மோகன்லால் நடித்த லூசிபர்.. இன்னொன்று அஜித் நடித்த வேதாளம். லூசிபர் ரீமேக்கை மோகன்ராஜா இயக்க, வேதாளம் ரீமேக்கை மெஹர் ரமேஷ் என்பவர் இயக்குகிறார். இவர் பிரபாஸை வைத்து பில்லா படத்தை ரீமேக் செய்து இயக்கியவர்.
வேதாளம் படத்தின் கதை கோல்கட்டா நகர பின்னணியில் நடைபெறுவதால், படத்தின் முக்கியமான, அதேசமயம் சிரஞ்சீவி இடம்பெறாத மாண்டேஜ் காட்சிகளை கடந்த வருடம் நடைபெற்ற தசரா பண்டிகையின் போதே படமாக்கி விட்டாராம் மெஹர் ரமேஷ். இந்த மாண்டேஜ் காட்சிகளை படமாக்குவதற்கு மட்டும் முப்பது லட்சம் செலவு செய்துள்ளாராம் மெஹர் ரமேஷ். இதனால் லூசிபர் ரீமேக்கைவிட, வேதாளம் ரீமேக்கிற்கு தான் சிரஞ்சீவி முதல் சிக்னல் தருவார் என்றே தெரிகிறது.