தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
தெலுங்கில் தற்போது ஆச்சார்யா படத்தில் நடித்து வரும் சிரஞ்சீவி இன்னும் சில காட்சிகளில் நடித்தால் அவரது வேலை முடிந்துவிடும். இதையடுத்து அவர் நடிப்பதற்காக இரண்டு ரீமேக் படங்கள் காத்திருகின்றன. ஒன்று மலையாளத்தில் மோகன்லால் நடித்த லூசிபர்.. இன்னொன்று அஜித் நடித்த வேதாளம். லூசிபர் ரீமேக்கை மோகன்ராஜா இயக்க, வேதாளம் ரீமேக்கை மெஹர் ரமேஷ் என்பவர் இயக்குகிறார். இவர் பிரபாஸை வைத்து பில்லா படத்தை ரீமேக் செய்து இயக்கியவர்.
வேதாளம் படத்தின் கதை கோல்கட்டா நகர பின்னணியில் நடைபெறுவதால், படத்தின் முக்கியமான, அதேசமயம் சிரஞ்சீவி இடம்பெறாத மாண்டேஜ் காட்சிகளை கடந்த வருடம் நடைபெற்ற தசரா பண்டிகையின் போதே படமாக்கி விட்டாராம் மெஹர் ரமேஷ். இந்த மாண்டேஜ் காட்சிகளை படமாக்குவதற்கு மட்டும் முப்பது லட்சம் செலவு செய்துள்ளாராம் மெஹர் ரமேஷ். இதனால் லூசிபர் ரீமேக்கைவிட, வேதாளம் ரீமேக்கிற்கு தான் சிரஞ்சீவி முதல் சிக்னல் தருவார் என்றே தெரிகிறது.