தொகுப்பாளினி.... டூ நடிகை.... : நவீனாஸ்ரீயின் நம்பிக்கை | அபுதாபி ரிசார்ட்டில் நீச்சல் உடையில் சமந்தா | கூடுதல் காட்சிகளுடன் ஓடிடியில் 'விடுதலை 2' டைரக்டர்ஸ் கட் | ஆர்யா 36வது படத்தின் டைட்டில் டீசர் நாளை வெளியாகிறது | எமனுக்கு எமன், பாட்ஷா, அன்னபூரணி : ஞாயிறு திரைப்படங்கள் | ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் |
நடிகர் ஹம்சவர்தனின் மனைவியும், நடிகையுமான ரேஷ்மா என்கிற சாந்தி(வயது 42) நேற்று இரவு காலமானார்.
மறைந்த பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் மகன் ஹம்சவர்தன். ‛‛புன்னகை தேசம், வடுகபட்டி மாப்பிள்ளை, மம்முட்டி உடன் ஜூனியர் சீனியர்'' போன்ற படங்களில் நடித்துள்ளார். இவரது மனைவி சாந்தி. சினிமாவில் ரேஷ்மா என்ற பெயரில் கிழக்கு முகம், பூமணி உள்ளிட்ட சில படங்களில் நாயகியாக நடித்துள்ளார். கடந்த மாதம் சாந்தி கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கொரோனா நெகட்டிவ் என வந்தபோதும் மூச்சு திணறல் பிரச்னையில் தொடர் சிகிச்சையில் இருந்தார். இந்நிலையில் நேற்று இரவு உயிரிழந்தார்.
சாந்தியின் உடல் தேனாம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. இன்று மதியம் 2.30 மணிக்கு பெசன்ட் நகர் மின்மயானத்தில் இறுதிச்சடங்கு நடக்கிறது. ஹம்சவர்தன் - சாந்தி தம்பதிக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் இருக்கின்றனர். கொரோனாவாலும், அந்த நோயின் தாக்கத்தாலும் திரையுலகில் அடுத்தடுத்து பல மரணங்கள் நிகழ்ந்து உள்ளது. இது திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.