மார்ஷல் படத்தில் வில்லன் யார்... | கருப்பு படத்தில் நடிக்க மறுத்த சிம்பு.? | ராஷ்மிகா மந்தனா நடிக்கும் ‛தமா': தீபாவளிக்கு ரிலீசாகிறது | ஒரே மாதத்தில் கோட்டா சீனிவாசராவின் மனைவியும் மறைந்தார்! | சிக்கந்தர் தோல்வி: சல்மான்கான் மீது நேரடியாக குற்றம் சாட்டிய ஏ.ஆர்.முருகதாஸ்! | நெகட்டிவ் விமர்சனங்களால் ‛கூலி' வசூல் பாதிப்பா? திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | ஆபரேஷன் சிந்தூரில் வீர மரணம் அடைந்த முரளி நாயக் வாழ்க்கை சினிமாவாகிறது | அதிக வசூல் இயக்குனர்களில் முதலிடத்தில் லோகேஷ் கனகராஜ் | ஹீரோயின் ஆகும் ஆசை இல்லை: 'கூலி' மோனிகா பிளெஸ்சி | 'கேப்டன் பிரபாகரன்' படத்திற்காக வீரப்பனை சந்தித்தேன்: ஆர்.கே.செல்வமணி |
தெலுங்குத் திரையுலகத்தில் க்யூட் ஹீரோயின் எனப் பெயரெடுத்த கர்நாடகாவைச் சேர்ந்த ராஷ்மிகா மந்தானா, தமிழில் கார்த்தி நடித்த 'சுல்தான்' படத்தின் மூலம் அறிமுகமானார்.அடுத்து ஹிந்தியில் 'மிஷன் மஞ்சு, குட்பை' ஆகிய ஹிந்திப் படங்களில் நடித்து வருகிறார். மேலும், சில படங்களில் நடிக்க பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார். இதனால், ஹிந்தியில் அதிக கவனம் செலுத்துவதற்காக மும்பைக்கே குடியேறிவிட்டார்.
சில மாதங்களுக்கு முன்பு அவர் மும்பையில் சொந்தமாக ஒரு பிளாட் வாங்கியதாக செய்திகள் வெளிவந்தன. அங்கேயே குடியேறிவிட்டாரா அல்லது வாடகை வீட்டிற்குச் சென்றுள்ளாரா என்பது குறித்து தகவல் இல்லை.
தெலுங்கில் பிஸியான போது ஐதராபாத்திலும் ஒரு வீடு, புது கார் என வாங்கினார் ராஷ்மிகா. தற்போது தெலுங்கை விட்டு ஹிந்திக்குச் சென்றதும் அங்கும் வீடு வாங்கி செட்டிலாகியுள்ளார். மும்பை வாசம் நிரந்தரமா அல்லது தென்னிந்திய மொழிகளிலும் நடிக்க வருவாரா என்பது இனிமேல்தான் தெரியும்.
பாலிவுட் சென்ற தென்னிந்திய நடிகைகள் தாங்கள் வளர்ந்த மொழிப் பக்கம் மீண்டும் திரும்பிப் பார்த்ததில்லை என்பது தான் கடந்த கால வரலாறு.