மார்ஷல் படத்தில் வில்லன் யார்... | கருப்பு படத்தில் நடிக்க மறுத்த சிம்பு.? | ராஷ்மிகா மந்தனா நடிக்கும் ‛தமா': தீபாவளிக்கு ரிலீசாகிறது | ஒரே மாதத்தில் கோட்டா சீனிவாசராவின் மனைவியும் மறைந்தார்! | சிக்கந்தர் தோல்வி: சல்மான்கான் மீது நேரடியாக குற்றம் சாட்டிய ஏ.ஆர்.முருகதாஸ்! | நெகட்டிவ் விமர்சனங்களால் ‛கூலி' வசூல் பாதிப்பா? திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | ஆபரேஷன் சிந்தூரில் வீர மரணம் அடைந்த முரளி நாயக் வாழ்க்கை சினிமாவாகிறது | அதிக வசூல் இயக்குனர்களில் முதலிடத்தில் லோகேஷ் கனகராஜ் | ஹீரோயின் ஆகும் ஆசை இல்லை: 'கூலி' மோனிகா பிளெஸ்சி | 'கேப்டன் பிரபாகரன்' படத்திற்காக வீரப்பனை சந்தித்தேன்: ஆர்.கே.செல்வமணி |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து திரைக்கு வந்துள்ள கூலி படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. என்றாலும் நான்கு நாட்களில் இந்த படம் 400 கோடி வசூலை கடந்து விட்டதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த நிலையில் இந்தக் கூலி படத்தின் வசூல் எப்படி உள்ளது? என்பது குறித்து திருப்பூர் சுப்ரமணியம் ஒரு தகவல் வெளியிட்டுள்ளார்.
அவர் கூறுகையில், ‛‛கூலி படத்தை ரஜினி ரசிகர்கள் ஆர்வமாக கண்டு களித்து வருகிறார்கள். அவர்கள் சொல்வதைக் கேட்டு மற்ற ரசிகர்களும் தியேட்டருக்கு வருகிறார்கள். குறிப்பாக விடுமுறை நாட்கள் மட்டுமின்றி விடுமுறை முடிந்த பிறகும் தியேட்டர்களில் 80 சதவீதம் ரசிகர்கள் இருக்கிறார்கள். அதனால் கூலி படம் குறித்து வெளியான நெகட்டிவ் விமர்சனங்கள் இந்த படத்தின் வசூலை எந்த வகையிலும் பாதிக்கவில்லை.
அதோடு விமர்சகர்கள் படத்தை குறை சொன்னாலும் ரசிகர்கள் எந்த குறையும் சொல்லவில்லை. ரசிகர்களுக்கு இந்த படம் பிடிக்கவில்லை என்றால் நேற்று திங்கட்கிழமை கண்டிப்பாக ரசிகர்களின் வருகை குறைந்திருக்கும். ஆனால் நேற்றும் அதற்கு முந்தைய மூன்று நாட்களைப் போன்றே கூட்டம் இருந்தது. அதனால் விமர்சனங்களை கடந்து கூலி படம் நல்ல முறையில் வசூலித்து வெற்றி பெறும்'' என்று அவர் தெரிவித்திருக்கிறார்.