திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
சமீபகாலமாக பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாகுவது அதிகரித்து வருகிறது. நடிகை சில்க் ஸ்மிதா பயோபிக் டர்ட்டி பிக்சர் எனும் பெயரில் பாலிவுட்டில் படமாகி பெரிய வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து, பழம்பெரும் நடிகை சாவித்திரியின் பயோபிக்காக 'நடிகையர் திலகம்' படம் உருவானது. இந்தப் படத்தை நாக் அஸ்வின் இயக்கியிருந்தார். மிகப் பெரியளவில் கொண்டாடப்பட்டது. வசூல் ரீதியாக மட்டுமல்லாமல் தேசியளவில் விருதுகளையும் பெற்றது. இந்த நிலையில், ஜெயலலிதாவின் பயோபிக் திரைப்படமாக 'தலைவி' படம் தயாராகிவருகிறது.
விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின் வாழ்க்கை வரலாறு திரைப்படங்களும் கடந்த சில ஆண்டுகளாக அதிக அளவில் உருவாகி வெற்றி பெற்று வருகின்றன. அந்த வகையில் எம்எஸ் தோனி, சச்சின் டெண்டுல்கர், மேரிகோம், மில்கா சிங் உள்ளிட்டவர்களின் விளையாட்டு வீரர்களின் பயோபிக் திரைப்படங்கள் உருவாகி வெற்றிப் பெற்றுள்ளது.
இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்ட பிரபல கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவிடம் உங்களின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக உருவாக்கினால், அதில் எந்த ஹீரோ நடிக்க வேண்டும் என விரும்புவீர்கள் என தொகுப்பாளர் கேட்டார். அதற்கு பதிலளித்த சுரேஷ் ரெய்னா, ‛‛என் பேவரைட் ஹீரோ எப்போதும் சூர்யா தான். என்னுடைய பயோபிக்கில் நடிக்க அவர் மட்டுமே பொருத்தமாக இருப்பார்'' என்று கூறினார்.
இதனால் சுரேஷ் ரெய்னா பயோபிக்கில் சூர்யா நடிப்பாரா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.