'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் | உரிமைக்குரல், வானத்தைப்போல, மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள் | பிளாஷ்பேக்: வித்தியாசமான தோற்றத்தில் விஜயகாந்த் நடித்து விஸ்வரூப வெற்றிகண்ட "வானத்தைப்போல" | தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் |

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் மற்றும் பலர் நடித்துள்ள படம் 'டாக்டர்'. இப்படம் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
கொரோனா இரண்டாவது அலை காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளதால் படத்தின் தயாரிப்பாளர் கேஜேஆர் ஸ்டுடியோஸ் ஓடிடி முடிவை எடுத்துள்ளதாகச் சொல்கிறார்கள். அதே சமயம் , “வலிமை, டாக்டர், மாநாடு” உள்ளிட்ட சில முன்னணி நடிகர்களின் படங்கள் அடுத்தடுத்து வெளிவந்தால் தியேட்டர்களுக்கு மக்கள் மீண்டும் வருவார்கள் என தியேட்டர்காரர்கள் காத்திருந்தார்கள்.
அவர்கள் காத்திருப்பிற்கு ஏமாற்றமளிக்கும் விதத்தில் 'டாக்டர்' படத்தின் ஓடிடி வெளியீடு அமைந்துள்ளதால் தியேட்டர்காரர்கள் எதிர்ப்பு தெரிவிக்க ஆரம்பித்துள்ளார்கள். இது தொடர்பாக அவர்களது வாட்சப் குழுக்களில் இன்னும் ஒரு மாதத்தில் தியேட்டர்களைத் திறக்க அரசு அனுமதி கொடுக்கும் எனத் தெரிகிறது. தியேட்டர்காரர்களும், வினியோகஸ்தர்களும் படத் தயாரிப்பாளரிடம் பேசி, படத்தைத் தியேட்டர்களில் வெளியிட வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்கள்.
இதனிடையே காலையில் டாக்டர் படம் ஓடிடி வெளியீடு டுவிட்டரில் டிரெண்ட் ஆனது. ஆனால் சற்றுநேரத்திற்கு முன் டாக்டர் தியேட்டரில் வெளியாகும், விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என டிரெண்ட் ஆனது.