தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
ரஜினியின் அமெரிக்க பயணம், அவரது உடல்நல பிரச்னை குறித்து கேள்வி எழுப்பினார் நடிகை கஸ்தூரி. இதற்கு எதிர்ப்பு கிளம்பியது. பின்னர் ‛‛அலைபேசியில் விவரத்தை சொன்னார்கள். நாரதர் கலகம் நன்மையில் முடிந்தது. நல்ல விஷயம் காத்திருக்கிறது. தலைவரை வரவேற்க தமிழகம் தயாராகட்டும்'' என கஸ்தூரி டுவீட் செய்தார்.
இந்நிலையில் ரஜினியின் மக்கள் தொடர்பாளர் டுவிட்டரில், ‛‛தலைவரோ ,தலைவர் குடும்பத்திலிருந்து யாரும் பேசவில்லை , எந்த விதமான விளக்கமும் கொடுக்க வில்லை என்பது தான் நிஜம்'' தெரிவித்துள்ளார்.
இதற்கு, ‛‛என்னை அழைத்து பேசியது கங்கை அமரன். அவர் பகிர்ந்த விவரங்களை நான் யாரிடமேனும் சரி பார்க்க வேண்டும் என்றெல்லாம் நினைக்க வில்லை'' என கஸ்தூரி பதிவிட்டுள்ளார்.
ரஜினிவை வைத்து கஸ்தூரி ஏற்படுத்திய கலகம் சமூகவலைதளங்களில் மீண்டும் பற்றிக் கொண்டுள்ளது. இதை வைத்து கஸ்தூரியை மீண்டும் ரசிகர்கள் வசை பாட தொடங்கிவிட்டனர்.