பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா மற்றும் பலர் நடித்த 'த்ரிஷ்யம் 2' படம் கடந்த பிப்ரவரி மாதம் ஓடிடி தளத்தில் வெளியானது. ஓடிடியில் வெளியானாலும் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
இப்போது ஐந்து மாதங்கள் கழித்து படத்தை சினிமா தியேட்டர்களில் இன்று முதல் வெளியிடுகிறார்கள். ஆனால், இந்தியாவில் அல்ல, அரேபிய நாடுகளில். யுஎஇ நாடுகளில் 27 தியேட்டர்களிலும், கத்தாரில் 8 தியேட்டர்களிலும், ஓமனில் 2 தியேட்டர்களில் இன்று முதல் திரையிடப்படுகிறது.
இது குறித்த தகவலை படத்தின் நாயகன் மோகன்லாலே அவரது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். “த்ரிஷ்யம் 2 கடைசியாக பெரிய திரைகளை சென்றடைந்துவிட்டது,” என தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
ஓடிடியில் வெளிவந்த பின்னும் படத்தைத் தியேட்டர்களில் வெளியிடுவது ஆச்சரியம்தான். என்ன இருந்தாலும் சின்னத் திரையான டிவியில் பார்ப்பதை விட பெரிய திரையான சினிமா தியேட்டர்களில் படத்தைப் பார்க்கும் அனுபவம் தனிதானே.