பிளாஷ்பேக்: வெள்ளித்திரையில் வேற்று கிரகவாசிகளை காண்பித்த முதல் திரைப்படம் “கலைஅரசி” | 2025ல் கவனம் பெற்ற சிறிய படங்கள் | பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் |

தமிழில் ஜெயம் படம் மூலமாக அறிமுகமாகி, அந்த ஒரே படத்தின் மூலம் புகழின் உச்சிக்கு சென்றவர் நடிகை சதா. அதன்பிறகு ஒரு கட்டத்தில் ஷங்கர் இயக்கிய அந்நியன் படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடிக்கும் அளவுக்கு உயர்ந்தார். அதற்கு முன்னதாக, அறிமுகமான காலகட்டத்தில் சதாவுக்கு தமிழ் மற்றும் தெலுங்கில் வரவேற்பு இருந்ததால், நிறைய படங்களை ஒப்புக்கொண்டு நடித்து வந்தார் அந்த சமயத்தில் தான் ரஜினிகாந்த் நடித்த சந்திரமுகி படத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு தேடிவந்தது, ஆனால் சில சூழல் காரணமாக அவரால் அதை ஏற்க முடியாமல் போனது.
இது குறித்த தகவலை சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் சதா. சந்திரமுகியில் நடிப்பதற்காக இரண்டு முறை வாய்ப்புகள் தேடி வந்தும் சில சூழல்கள் காரணமாக, அதில் நடிக்க முடியாமல் போனது. அதை நினைத்து நான் சில சமயம் அழுதும் இருக்கிறேன் என்று கூறியுள்ளார் சதா.
அதேசமயம் சினிமா வட்டாரங்களில் முதலில் இவரை மாளவிகா கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக அழைத்ததாகவும் அதனால் இவர்தான் நடித்தால் கதாநாயகியாகத்தான் நடிப்பேன் என கூறி மறுத்துவிட்டார் என்றும் ஒரு தகவல் அந்த சமயத்திலேயே சொல்லப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.