பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

தி கிரேமேன் படத்தை முடித்துவிட்ட தனுஷ் அடுத்தபடியாக கார்த்திக் நரேன் இயக்கும் தனது 43ஆவது படத்தில் ஐதராபாத்தில் முகாமிட்டு நடித்து வருகிறார். சேகர் கம்முலா இயக்கும் படம் மூலம் தெலுங்கில் அறிமுகமாகிறார் தனுஷ். மூன்று மொழிகளில் தயாராகும் இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் தொடங்குகிறது. இந்தநிலையில், மீண்டுமொரு தெலுங்கு படத்திலும் தனுஷ் நடிப்பதாக தற்போது இன்னொரு புதிய தகவலும் வெளியாகியுள்ளது.
தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாராகும் அந்த படத்தை சித்தாரா எண்டர்டெயின்மென்ட் நாக வம்சி தயாரிக்கிறார். அவரும் தனுஷை ஐதராபாத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளாராம். அந்த படத்தை தெலுங்கில் தொலி பிரேமா, மிஸ்டர் மஜ்னு, ரங்தே போன்ற படங்களை இயக்கிய வெங்கி அட்லூரி இயக்குகிறாராம். இது குறித்த தகவலை விரைவில் தனுஷ் அறிவிப்பார் என்று கூறப்படுகிறது.