திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
நாயை மையமாக வைத்து ஏராளமான திரைப்படங்கள் வெளிவந்துள்ளது. சிபிராஜ் நடித்து, தயாரித்த நாய்கள் ஜாக்கிரதை வெற்றி பெற்றது. தற்போது நாயை மையமாக வைத்து உருவாகி உள்ள படம் அன்புள்ள கில்லி.
புதுமுகம் ராமலிங்கம் ஶ்ரீநாத் எழுதி, இயக்கியுள்ளார். மைத்ரேயா ராஜசேகர், துஷாரா விஜயன் மற்றும் சாந்தினி தமிழரசன் , மைம் கோபி, ஆஷிக், நாஞ்சில் விஜயன், இளவரசு, பூ ராமு, இந்துமதி, ஶ்ரீரஞ்சனி மற்றும் பேபி கீர்த்திகா உள்பட பலர் நடித்திருக்கிறார்கள்.
படம் பற்றிய இயக்குனர் ராமலிங்கம் ஸ்ரீநாத் கூறியதாவது: மனிதனின் உற்ற தோழனாக இருந்து வருகிறது நாய். அது சாதாரண மிருகம் மட்டுமல்ல, அது வீட்டின் பாதுகாவலன். அனைவர் வீடுகளிலும் நாய் ஒரு குடும்ப உறுப்பினராக தான் இருக்கும். அதை யாரும் பிரித்து பார்க்க மாட்டார்கள்.
உலகம் முழுக்க நாயை உறவாகவே கொண்டாடி வருகிறார்கள். நாயுடான மனிதனின் இந்த அழகிய உறவை சொல்லும் படமாக இருக்கும். நாயை வைத்து எடுக்கப்பட்ட முந்தைய படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக இது இருக்கும். என்றார்.