இந்த வாரம் இரண்டே படம் ரிலீஸ்… | மகா அவதார் நரசிம்மா: பட்ஜெட் 15 கோடி, வசூல் 250 கோடி | சினிமாவில் இருப்பவர்களே சினிமாவை அழிக்கின்றனர்: இயக்குனர் பேரரசு வேதனை | தமிழில் ஒரு ரவுண்ட் வருவாரா கெட்டிகா ஷர்மா... | தெலுங்கு சினிமா ஸ்டிரைக்: பஞ்சாயத்தில் சிரஞ்சீவி | பிளாஷ்பேக் : 250வது படத்தில் சிவாஜிக்கு ஏவிஎம் செய்த மரியாதை | பிளாஷ்பேக் : தாஜ்மஹாலில் படப்பிடிப்பு நடந்த முதல் தமிழ் படம் | நடிகர் சங்கத்தில் இருந்து விலகியவர்கள் திரும்ப வேண்டும் : தலைவி ஸ்வேதா மேனன் வேண்டுகோள் | ஆணவ கொலை பின்னணியில் உருவாகும் 'நெல்லை பாய்ஸ்' | நெகட்டிவ் விமர்சனங்கள் கூலி வசூலை பாதிக்கிறதா? |
சண்டக்கோழி 2 படத்தை அடுத்து தெலுங்கு நடிகர் ராம் பொத்னேனியை வைத்து தமிழ், தெலுங்கில் ஒரு படத்தை இயக்குகிறார் லிங்குசாமி. இந்த படத்தில் உப்பெனா படத்தில் நடித்த கிர்த்தி ஷெட்டி நாயகியாக நடிக்கிறார். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படத்திற்கு லூசிபர், திரிஷ்யம்-2 படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த சுஜித் வாசுதேவ் ஒளிப்பதிவு செய்கிறார். சில்வர் ஸ்கிரீன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை 12-ந்தேதி முதல் ஐதராபாத்தில் தொடங்கயிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தை லிங்குசாமி இயக்கப்போவதாக அறிவித்த பிறகு, ஏற்கனவே பேசியபடி தங்களது ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்திற்கு ஒரு படத்தை இயக்கிய பிறகுதான் இந்த படத்தை இயக்க வேண்டும் என்று லிங்குசாமிக்கு எதிரான ஒரு நடவடிக்கையை எடுத்தார் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா. ஆனால் அவர்களுக்கிடையே நடந்த பேச்சுவார்த்தை சுமூக முடிவை எட்டியிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.