நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
சண்டக்கோழி 2 படத்தை அடுத்து தெலுங்கு நடிகர் ராம் பொத்னேனியை வைத்து தமிழ், தெலுங்கில் ஒரு படத்தை இயக்குகிறார் லிங்குசாமி. இந்த படத்தில் உப்பெனா படத்தில் நடித்த கிர்த்தி ஷெட்டி நாயகியாக நடிக்கிறார். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படத்திற்கு லூசிபர், திரிஷ்யம்-2 படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த சுஜித் வாசுதேவ் ஒளிப்பதிவு செய்கிறார். சில்வர் ஸ்கிரீன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை 12-ந்தேதி முதல் ஐதராபாத்தில் தொடங்கயிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தை லிங்குசாமி இயக்கப்போவதாக அறிவித்த பிறகு, ஏற்கனவே பேசியபடி தங்களது ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்திற்கு ஒரு படத்தை இயக்கிய பிறகுதான் இந்த படத்தை இயக்க வேண்டும் என்று லிங்குசாமிக்கு எதிரான ஒரு நடவடிக்கையை எடுத்தார் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா. ஆனால் அவர்களுக்கிடையே நடந்த பேச்சுவார்த்தை சுமூக முடிவை எட்டியிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.