தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
தர்பார் படத்தில் கண்ணுல திமிரு பாடலில் ரஜினிகாந்த் நடனம் ஆடிக்கொண்டே எதிரிகளுடன் மோதும் சண்டை காட்சி ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்த சண்டை காட்சியை வடிவமைத்தவர்கள் தெலுங்கில் பிரபலமாக உள்ள இரட்டை சகோதரர்களான ராம்-லட்சுமண் மாஸ்டர்கள் தான். அதன் பின்னர் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி வரும் ஆர்ஆர்ஆர் படத்தில் சண்டைகாட்சிகளை வடிவமைத்து வந்தவர்கள், தற்போது அந்தப்படத்தில் இருந்து விலகியுள்ளனர்.
ஆனால் இயக்குனருடனோ, ஹீரோக்களுடனோ இவர்களுக்கு எந்தவித மனஸ்தாபமும் இல்லை. இந்தப்படத்தில் இவர்களது மேற்பார்வையில் சண்டைக்காட்சிகளை படமாக்கியபோது ராம்சரணுக்கு காயம் ஏற்பட்டு அதனால் படப்பிடிப்பு தற்காலிகமாக பல நாட்கள் நிறுத்தப்பட்டது. தற்போது நிலைமை சீராகி அதே சண்டைக்காட்சியை படமாக்க மொத்தமாக தேதிகள் ஒதுக்கும்படி அழைப்பு வந்தபோது, வேறு படத்திற்காக அவர்கள் ஒப்பந்தம் ஆகிவிட்டதால் தான் ஆர்ஆர்ஆர் படத்தில் இருந்து விலகியுள்ளனராம்.