ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை |

வையாகாம்18 ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்திய சினிமாத் துறையின் முதல் முயற்சியாக மார்ப்ளிக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து 'பைட்டர்' எனும் வான்வெளியில் அதிரடி சண்டைக் காட்சிகள் நிறைந்த திரைப்படத்தை தயாரிக்கிறது. இதில் ஹிருத்திக் ரோஷன் மற்றும் தீபிகா படுகோனே ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சித்தார்த் ஆனந்த் இயக்கி உள்ளார். இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு வெளியாக உள்ளது.
சித்தார்த் ஆனந்த் கூறுகையில், ‛‛பைட்டர் திரைப்படம் எனது கனவு திட்டமாகும். இந்தப் படத்தின் மூலம் இந்திய திரைப்படத்தை உலக அளவில் கொண்டு செல்லவிருக்கிறோம். ரசிகர்களுக்கு பிரமாண்ட திரைப்படமாக அமையும். உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை மனதில் கொண்டு தயாராகும் இப்படம் நவீன தொழில்நுட்பத்தில் உலகம் முழுவதும் பல இடங்களில் படமாக்கப்படுகிறது. இந்த கதை உண்மையான இந்தியனைப் பற்றியதாகும். நமது ஆயுதப்படைகளின் வீரம், தியாகம் மற்றும் தேச பக்திக்கு வணக்கம் செலுத்துகிறது என்று தெரிவித்தார்.
வையாகாம்18 ஸ்டூடியோஸின் அஜித் அந்தரே கூறுகையில், வான்வெளியில் சண்டை காட்சிகள் நிறைந்த திரைப்படமானது ஒரு தனித்துவமான சினிமா அனுபவத்தை வழங்குகிறது. இதுபோன்று இந்தியாவில் எந்தவொரு படமும் வந்ததில்லை. 'டாப் கன்' என்ற ஆங்கில படத்தின் ரசிகன் என்ற முறையில் வான்வெளியில் அதிரடி சண்டைக் காட்சிகள் நிறைந்த இந்தியாவை மையமாகக் கொண்ட ஒரு சிறந்த கதையை நான் தேடிக்கொண்டிருந்தேன். அதற்கான பதில் எனக்கு 'பைட்டர்' மூலம் கிடைத்துள்ளது. இயக்குனர் சித்தார்த் இதை புரிந்துகொண்டு தனது படங்களில் தனித்துவமான விஷயங்களை புகுத்தி வருகிறார். நான் அவருடன் இணைந்திருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது என்றார்.