இனி உறுப்பினர் அல்லாதவர்கள் நடிப்பது கஷ்டம்: சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் பரத் | மைக்கை வைத்துவிட்டு வெளியேறட்டுமா? : வார் 2 விழாவில் டென்ஷனான ஜூனியர் என்டிஆர் | தலைமைக்கு போட்டியிடும் பெண் தயாரிப்பாளரின் வேட்பு மனு குறித்து முன்னாள் பார்ட்னர் எதிர் கருத்து | சிறையில் இருக்கும் நடிகை ரன்யா ராவின் வளர்ப்பு தந்தைக்கு மீண்டும் வழங்கப்பட்ட டிஜிபி பதவி | பிளாஷ்பேக்: திரைக்கதை வசனம் எழுதிய ரஜினி; வெள்ளித்திரையில் மின்னத் தவறிய “வள்ளி” | அபினய்-க்கு உதவிய தனுஷ் | இந்தியாவில் முதல் நாளில் வசூலைக் குவித்த படங்கள் | துருவ் விக்ரம் படத்தில் மூன்று கதாநாயகிகள்? | 'தலைவன் தலைவி' வெற்றி, சம்பளத்தை உயர்த்தும் விஜய் சேதுபதி? | ‛பல்டி'யில் கபடி வீரராக களமிறங்கிய சாந்தனு: முன்னோட்ட வீடியோ வெளியீடு |
பல படங்களில் குணச்சித்ர வேடங்களில் நடித்த ‛ஆடுகளம்' முருகதாஸ், கதையின் நாயகனாக நடிக்கும் படம் ‛ஜகா'. இதை ஆர்.விஜயமுருகன் இயக்கி உள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இதில் சிவன் போன்று வேடமணிந்து முருகதாஸ் ஆக்சிஜன் சிலிண்டர் மூலம் சுவாசம் செய்வது போன்று இருந்தது. இது இந்துக்கள் மனதை புண்படுத்தும் விதமாக அமைந்துள்ளது என்றும், இதை நீக்காவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என ஹிந்து இயக்கங்கள் அறிவித்துள்ளது.
இந்நிலையில் இயக்குனர் ஆர்.விஜயமுருகன் வெளியிட்ட அறிக்கை : ஜகா பர்ஸ்ட் லுக் போஸ்டர் பலரின் விவாதத்திற்கு உள்ளாகி உள்ளது. எங்கள் நிறுவனத்தின் பெயரே ஓம் டாக்கீஸ். பாபநாசம் சிவன் கோயிலில் பூஜை போட்டுவிட்டு தான் படப்பிடிப்பை தொடங்கினோம். அப்படி இருக்கும்போது சிவபெருமானை அவமதிப்போமா. கோவிட் 19 விழிப்புணர்வு நோக்கத்தில் வைக்கப்பட்ட காட்சி தான் அது. கொரோனா வழிகாட்டு முறைகளை மீறக்கூடாது என கடவுளே சொல்வது போன்று தான் அந்த போஸ்டர். மனிதர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதை விட கடவுள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும் என்ற எண்ணத்தில் தான் அந்த போஸ்டர் வடிவமைக்கப்பட்டது.
படத்தில் எந்த இடத்திலும் கடவுள் அனுமதிக்கப்படவில்லை. அதுபோன்ற எண்ணம் ஒருபோதும் எங்களுக்கு ஏற்படாது. மலிவான விளம்பரம் போடும் விருப்பம் எங்கள் குழுவினருக்கு துளியும் இல்லை. இருப்பினும் எந்தவித உள்நோக்கமும் இல்லாது செயல்பட்ட எங்களின் இத்தகைய செயல் பலரின் மனதை புண்பட்டது அறிந்து வருந்துகிறேன், அதற்காக மன்னிப்பு கோருவதோடு கொரோனா இல்லாத உலகம் அமைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். நன்றி.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.