ரிலீஸாகாத ‛மஞ்சும்மேல் பாய்ஸ்' பட நடிகரின் பட காட்சிகள் ஆன்லைனில் லீக் ; உதவி இயக்குனர் மீது புகார் | நிவின்பாலி மீதான மோசடி வழக்கு விசாரணையை நிறுத்தி வைத்த நீதிமன்றம் | இந்தாண்டு பல பாடங்களை கற்றுத் தந்தது : ஹன்சிகா | வேட்பு மனு நிராகரிப்பு சரிதான் ; பெண் தயாரிப்பாளரின் கோரிக்கையை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | 2வது திருமண சர்ச்சைக்கு இடையில் முதல் மனைவியுடன் விழாவில் பங்கேற்ற மாதம்பட்டி ரங்கராஜ் | கிஸ் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் | முருகனாக நடித்த ஸ்ரீதேவி; 13 வயதில் ஹீரோயின் ஆனவர்: இன்று ஸ்ரீதேவியின் 62வது பிறந்தநாள் | தெரு நாய்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து விமர்சனத்தில் சிக்கிய ஜான்வி கபூர்! | சினிமாவில் 50... நம்ம சூப்பர் ஸ்டாரை நானும் பாராட்டுகிறேன் : கமல் | நாகார்ஜுனாவின் வில்லன் வேடத்திற்கான எதிர்பார்ப்பை எகிற வைத்த ரஜினி! |
ஜெயம் ரவி அடுத்து இயக்குனர் கல்யாண கிருஷ்ணனுடன் அடுத்த படத்தில் நடிக்க உள்ளார். இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே 2015 ஆம் ஆண்டு பூலோகம் திரைப்படம் வெளியாகியது. தற்போது இரண்டாவது முறையாக இருவரும் இணைய உள்ளனர். ஜெயம் ரவியின் 28-வது படமாக உருவாகவிருக்கும் இப்படத்தில் பிரியா பவானி சங்கர் தாநாயகியாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
'யாரடி நீ மோகினி, உத்தம புத்திரன்', 'குட்டி' போன்ற படங்களை இயக்கிய மித்ரன் ஜவகர் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கிறார். தற்போது நான்காவது முறையாக இந்த கூட்டணி இணையவுள்ளது. இப்படத்திற்கு தனுஷ்தான் கதை, திரைக்கதை மற்றும் வசனங்கள் எழுதியுள்ளார் என கூறப்படுகிறது. பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கவுள்ளார்.
இந்நிலையில் வரும் ஆகஸ்ட் 5ம் தேதி முதல் டி44 படத்தின் படப்பிடிப்பை தொடங்க மித்ரன் ஜவஹர் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மூன்று கதாநாயகிகள் நடிப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானது. அதில் 10 ஆண்டுகளுக்கு பிறகு நடிகை ஹன்சிகா தனுஷுடன் ஜோடியாக நடிக்கவுள்ளார். இவர் ஏற்கனவே தனுஷுடன் மாப்பிள்ளை படத்தில் நடித்திருந்தார். அதேநேரம் நடிகை நித்யா மேனன், ப்ரியா பவானி சங்கர் ஆகிய இருவரும் இப்படத்தில் நடிக்கவுள்ளனர்.
வேகமாக வளரும் பிரியா பவானி சங்கர் ஜெயம் ரவி, தனுஷ் என 2 முன்னணி நடிகர்கள் படங்களில் அடுத்தடுத்து நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.