லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‛கைதி -2' படத்தில் நடிக்கவில்லை! -அனுஷ்கா மறுப்பு | திரில்லர் கதையை படமாக்கும் பிரேம்குமார்! பிரதீப் ரங்கநாதன் நடிக்கிறார்!! | கமலின் 237வது படம் டிராப் ஆகிவிட்டதா? | சண்முக பாண்டியன் நடித்துள்ள ‛படை தலைவன்' படத்தின் இரண்டு நாள் வசூல் எவ்வளவு? | ஸ்ரீ லீலாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சுதா கொங்கரா வெளியிட்ட வீடியோ! | எம்.பி.,யான கமல்ஹாசன்; சினிமா வளர்ச்சிக்காக குரல் கொடுப்பாரா? | நல்ல கதைக்காக காத்திருக்கும் ஜோதிகா | அடுத்த படத்துல ஹீரோயின் உண்டா? சண்முக பாண்டியன் பதில் | ஜனநாயகன் பட இசை வெளியீட்டு விழா நடக்குமா? | விஜய் மில்டன் இயக்கத்தில் இரண்டாம் முறையாக இணைந்த அம்மு அபிராமி! |
நிசப்தம் படத்தை அடுத்து தெலுங்கில் நவீன்பொலி ஷெட்டியுடன் இணைந்து ஒரு படத்தில் அனுஷ்கா நடிக்கப் போவதாக சில மாதங்களாகவே செய்திகள் வெளியாகி வந்தன. காதல் கதையில் உருவாக இருந்த இந்த படத்தை பி.மகேஷ் இயக்க, யு.வி.கிரியேஷசன்ஸ் தயாரிக்க திட்டமிட்டிருந்தது.
ஆனால் இப்போது வரை அப்படம் தொடங்கப்படவில்லை. சமீபத்தில் மீடியாக்களை சந்தித்த நவீன்பொலி ஷெட்டியிடம், அனுஷ்காவுடன் நடிக்கும் படம் குறித்து கேள்வி கேட்கப்பட்டபோது, அதுகுறித்து எனக்கு எதுவும் தெரியாது. சம்பந்தப்பட்ட நிறுவனத்திடமிருந்து அதிகாரப்பூர்வ தகவல் வந்தால் மட்டுமே அது நடைபெறும் என்று தெரி வித்திருக்கிறார்.
இதையடுத்து அனுஷ்கா - நவீன்பொலி ஷெட்டி நடிக்கயிருந்த படம் நிறுத்தப்பட்டு விட்டதாக டோலிவுட்டில் ஒரு செய்தி பரவி வருகிறது.