மலையாளத்தில் அறிமுகமான கதிர் | பிளாஷ்பேக்: அம்பிகாவுடன் நெருக்கமாக நடித்த சிவகுமார் | தமிழில் வாய்ப்பு தேடும் ஐஸ்வர்யா மேனன் | பிளாஷ்பேக்: தமிழ் ரசிகர்களை கவர்ந்த முதல் மலையாள லேடி சூப்பர் ஸ்டார் | எனது பாடல்களை அனிருத் பாடல் என்று நினைக்கிறார்கள்: சாம் சி.எஸ் வருத்தம் | பிளாஷ்பேக்: பலாத்கார காட்சியில் பாடலை வைத்து புதுமை படைத்த இயக்குநர் கே பாலசந்தர் | தவறான வீடியோ பதிவுக்கு ஆச்சரியப்பட்ட அல்லு அர்ஜுன் | மீண்டும் காதல் கிசுகிசுவில் சிக்கிய தனுஷ் | அமெரிக்க முன்பதிவு : 'வார் 2'ஐ பின்னுக்குத் தள்ளி முந்தும் 'கூலி' | கமல் தயாரிப்பில் அண்ணன், தம்பி நடிப்பார்களா? |
தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் என்ற அடையாளத்துடன் இருப்பவர் ஷங்கர். ரஜினிகாந்தை வைத்து பல கோடிகளில் உருவான '2.0' படம் மூலம் இந்திய அளவிலும் பேசப்படுவோம் என எதிர்பார்த்தார். ஆனால், அந்தப் படம் எதிர்பார்த்த பெரிய வெற்றியைப் பெறவில்லை. அடுத்து 'இந்தியன் 2' படத்தில் அந்த இந்திய சாதனையைச் செய்துவிடலாம் என எதிர்பார்த்தார். கடைசியில் முக்கால்வாசி படத்தை முடித்தபின் படத்தை அப்படியே விட்டுவிட்டு தெலுங்குப் பக்கம் போய்விட்டார்.
தெலுங்கில் ராம் சரண் நடிக்க பான்-இந்தியா வெளியீடாக புதிய படம் ஒன்றை இயக்கப் போகிறார். 'ஆர்சி 15' என்று அழைக்கப்படும் அப்படத்திற்கு தமன் இசையமைக்கப் போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள். ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த 'பாய்ஸ்' படத்தில் ஒரு கதாநாயகனாக நடித்தவர் தமன். தற்போது தெலுங்கில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கிறார். முதன் முதலாக ஷங்கர் படத்திற்கு இசையமைக்க உள்ளார்.
ஷங்கர் இதுவரையிலும் ஏ.ஆர்.ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ், அனிருத் ஆகியோரைத் தான் தனது படங்களுக்கு இசையமைப்பாளராக பணிபுரிய வைத்துள்ளார். இப்போது அவர்களை விட்டு விலகி ஒரு பான்-இந்தியா படத்திற்கு தமனை இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்திருப்பது ரஹ்மான், ஹாரிஸ், அனிருத் ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்திருக்கிறது.