திரையுலகில் 50 ஆண்டுகள் : ரஜினிகாந்த்துக்கு இபிஎஸ், உதயநிதி, பிரேமலதா வாழ்த்து | 'எக்ஸ்க்ளுசிவ் ஒப்பந்தம்' : 'வார் 2' செய்வது சரியா ? | கூலி படத்தில் ரஜினிக்கு ஜோடி கிடையாதா? | இனி உறுப்பினர் அல்லாதவர்கள் நடிப்பது கஷ்டம்: சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் பரத் | மைக்கை வைத்துவிட்டு வெளியேறட்டுமா? : வார் 2 விழாவில் டென்ஷனான ஜூனியர் என்டிஆர் | தலைமைக்கு போட்டியிடும் பெண் தயாரிப்பாளரின் வேட்பு மனு குறித்து முன்னாள் பார்ட்னர் எதிர் கருத்து | சிறையில் இருக்கும் நடிகை ரன்யா ராவின் வளர்ப்பு தந்தைக்கு மீண்டும் வழங்கப்பட்ட டிஜிபி பதவி | பிளாஷ்பேக்: திரைக்கதை வசனம் எழுதிய ரஜினி; வெள்ளித்திரையில் மின்னத் தவறிய “வள்ளி” | அபினய்-க்கு உதவிய தனுஷ் | இந்தியாவில் முதல் நாளில் வசூலைக் குவித்த படங்கள் |
கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை தற்போது திரை வடிவமாக்கிக் கொண்டிருக்கிறார் மணிரத்னம். இரண்டு பாகங்களாக உருவாகும் இந்த படத்தின் முதல் பாகம் அடுத்த ஆண்டு வெளியாகும் என அறிவித்துள்ளனர். இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்யா ராஜேஷ் என பல பிரபலங்கள் நடிக்கிறார்கள்.
இந்த படத்தில் நடிகர் நடிகைகள் நடிக்கும் கதாபாத்திரங்கள் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளியாகி வரும் நிலையில், மலையாள நடிகரான ஜெயராம் இப்படத்தில் நடிக்கும் கேரக்டர் பற்றி தற்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது. பொன்னியின் செல்வனில் மொட்டைத்தலையுடன் குடுமி வைத்தபடி தான் நடிக்கும் கெட்டப்பில் எடுத்துக்கொண்ட ஒரு புகைப் படத்தை கார்த்தி, ஜெயம்ரவியுடன் இணைந்து எடுத்து அதை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார் ஜெயராம்.
அதையடுத்து பொன்னியின் செல்வன் படத்தில் ஜெயராம் ஆழ்வார்க்கடியான் என்ற நகைச்சுவை கலந்த வேடத்தில் நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.