பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

பைசா படத்தின் மூலம் அறிமுகமானவர் ஆரா. அதன்பிறகு ஒன்வே, தேவதாஸ் பிரதர்ஸ், குழலி படங்களில் நடித்தார். இந்த படங்கள் வெளிவரவில்லை. தற்போது காதல் புதிது என்ற படத்தில் நடித்து வருகிறார். ஆரா எதிர்பார்ப்பதெல்லாம் குழலி படத்தின் வெளியீட்டை. காரணம் சர்வதேச பட விழாக்களில் விருதுகளை பெற்று வரும் அந்த படம் தனக்கு நல்ல திருப்பம் தரும் என்று நம்புகிறார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: குழலியில் நான் கிராமத்து பெண்ணாக நடித்திருக்கிறேன். காக்கா முட்டை படத்தில் நடித்த விக்னேஷ் ஜோடியாக நடித்திருக்கிறேன். ஒரு கிராமத்து பெண்ணின் கல்வி கனவுகளை சொல்லும் படம் அது. அந்த படம் பல விருதுகளை குவித்து வருவது மகிழ்ச்சியாக இருக்கிறது. சமீபத்தில்கூட இந்தோ பிரஞ்ச் பட விழாவில் சிறந்த படம், சிறந்த இசை விருதுகளை பெற்றது. இந்த படம் தமிழ்நாட்டில் வெளிவரும்போது எனக்கு நல்ல பெயரையும், புகழையும் பெற்றுத் தரும் என்ற நம்பிக்கை இருக்கிறது. என்றார்.