போர்ச்சுக்கல் நாட்டிற்கு ஹனிமூன் சென்ற சமந்தா- ராஜ் நிடிமொரு! | காத்திருங்கள்: அஜித்தின் 'மங்காத்தா' விரைவில் ரீ ரிலீஸ்! | தனுஷ் 54வது படத்தின் டைட்டில் போஸ்டர் எப்போது? | கதையின் நாயகியாக மாறிய தனுஷ் பட நடிகை! | ரியோ ராஜின் 'ராம் இன் லீலா' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! | நானி படத்தில் இணையும் பிரித்விராஜ்! | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை ஒப்பந்தம் செய்த துல்கர் சல்மான்! | எனது பழைய போட்டோக்களை பகிராதீர்கள்: மும்தாஜ் வேண்டுகோள் | லெஸ்பியனாக இருந்தேன்: டைட்டானிக் ஹீரோயின் ஓப்பன் டாக் | சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் கல்யாணி |

தமிழக அரசியல் அரங்கில் விஜய் வருவாரா, மாட்டாரா என கடந்த சில வருடங்களாகவே ஒரு பரபரப்பு நிலவி வருகிறது. அவரது ரசிகர்களை விஜய்யை 'இளைய தளபதி' என அழைத்து வந்ததை சில வருடங்களுக்கு முன்பு 'தளபதி' என மாற்றி அழைக்க வைத்தார் விஜய்.
சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக விஜய் பெயரில் கட்சியைப் பதிவு செய்து சர்ச்சைக்கு உள்ளானார் விஜய்யின் அப்பா. புதிதாகப் பதவியேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும் இதுவரை விஜய் சந்தித்து கொரானோ நிவாரண நிதி வழங்கவில்லை என்ற ஒரு சர்ச்சையும் நிலவி வருகிறது.
இந்தநிலையில் சென்னை, பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று மதியம் நடந்தது. அந்தக் கூட்டத்தில் விஜய்யும் கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டது.
கூட்டத்திற்கு வந்த விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள் பலரும் விஜய்யிடம் நற்பெயரை வாங்குவதற்கு பரிசுகளை வழங்கி வருவதாகத் தெரிகிறது- கர்நாடகாவைச் சேர்ந்த விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள், விஜய்யின் ஆளுயர சிலை அவருக்கு பரிசளித்துள்ளார்கள்.
சமூக வலைத்தளங்களில் அந்த சிலை பற்றிய செய்தி வைரலாகப் பரவி வருகிறது.