'பாகுபலி தி எபிக்' படத்தின் டீசர் ஆகஸ்ட் 14ல் வெளியாகிறது! | ''வீட்ல நான் காலில் விழணும்'': அஜித் | காதல் கிசுகிசு எதிரொலி: கிரிக்கெட் வீரர் முகமது சிராஜிக்கு ராக்கி கட்டிய பாடகி ஜனாய் போஸ்லே! | 175 கோடியை கடந்த முதல் இந்திய அனிமேஷன் படம் மகாஅவதார் நரசிம்மா! | சம்பளத்தை உயர்த்தினாரா சூரி ? | விதியை மதிக்க மறுத்த அல்லு அர்ஜுன்: ரசிகர்கள் கண்டனம் | சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல்: ஓட்டுப்பதிவு விறுவிறு | பிளாஷ்பேக்: இசைத்தட்டில் இடம் பெறாத எம் கே தியாகராஜ பாகவதரின் பாடல்களும், “சிந்தாமணி” திரைப்படமும் | மாஸ் இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா! | கேரளா டிக்கெட் முன்பதிவில் சாதனை படைக்கும் 'கூலி' |
இருட்டு அறையில் முரட்டுக்குத்து, நோட்டா உள்பட பல படங்களில் நடித்தவர் யாஷிகா ஆனந்த். தற்போது கடமையை செய், பாம்பாட்டம் உள்பட ஐந்து படங்களில நடித்து வருகிறார். நேற்று முன்தினம் நள்ளிரவு தனது நண்பர்களுடன் சென்னையை நோக்கி காரில் வந்தபோது மகாபலிபுரம் அருகே சாலையில் தடுப்புச் சுவரில் கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் நிகழ்விடத்திலேயே யாஷிகாவின் தோழி உயிரிழந்தார். யாஷிகா ஆனந்த் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். காரை யாஷிகா தான் ஓட்டி வந்துள்ளார். இதனால் அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதனிடையே சிகிச்சையில் உள்ள யாஷிகாவிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதில் காரை தான் ஓட்டி வந்ததாக கூறியுள்ள யாஷிகா, திடீரென்று கார் கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்து ஏற்பட்டது. என் தோழி சீட் பெல்ட் அணியாமல் இருந்ததால் காருக்கு வெளியே தூக்கி வீசப்பட்டார் என்று போலீசாரிடம் நடந்ததை தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் யாஷிகாவின் ஓட்டுனர் உரிமத்தையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனராம்.
மேலும், இந்த கார் விபத்தில் யாஷிகா ஆனந்தின் வலது கால் எலும்பு மற்றும் இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டதால அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து யாஷிகாவின் சினிமா தோழியான நடிகை ஐஸ்வர்யா தத்தா, யாஷிகா நலமுடன் இருப்பதாக தனது டுவிட்டரில் தெரிவித்திருப்பவர், அவர் விரைவில் பூரண குணமடைய அனைவரும் பிரார்த்தனை செய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.