பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

2019ம் ஆண்டு சாருஹாசன், ஜனகராஜ், பாலா சிங், மாரிமுத்து ஆகியோர் நடிப்பில் வெளியான படம் தாதா 87. இந்தப் படத்தை விஜய் ஸ்ரீ தயாரித்து, இயக்கியிருந்தார். சாய்குமார் நடிப்பில் தெலுங்கில் உருவாகி வரும் ஒன் பை டூ தனது படத்தின் அதிகாரபூர்வமற்ற ரீமேக் என்று குற்றம் சாட்டி உள்ளார் இயக்குனர் விஜய் ஸ்ரீ. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
கமல்ஹாசனின் அண்ணன் சாருஹாசனை வைத்து நான் எழுதி இயக்கி ஜி மீடியா கலை சினிமாவுடன் இணைந்து தயாரித்த படம் தாதா 87. தற்சமயம் பவுடர் ,பப்ஜி படங்களை இயக்கி வருகிறேன். சாய்குமார் நடிப்பில் ஒன் பை டூ என்ற பெயரில் தெலுங்கில் ஒரு படம் தயாராகி வருகிறது. இது தாதா 87 படத்தின் ரீமேக் என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.
ஒன் பை டூ படக்குழு என்னுடைய கற்பனையும் என் உழைப்பையும் என்னிடம் முறையாக எந்தவிதமான அனுமதியும் பெறாமல் பயன்படுத்தி இருப்பதும், சாய்குமார் போன்ற மிகப்பெரிய நடிகர் துணையுடன் நடந்து இருப்பதும் வருந்தத்தக்கது. சம்பந்தப்பட்ட நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளோம். என்று குறிப்பிட்டுள்ளார்.