300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் | பேவரைட் ஆஸ்திரேலிய நடிகையுடன் புத்தாண்டை கொண்டாடிய நதியா | நான் ஹிந்தியில் படம் இயக்கினால் இவர்தான் ஹீரோ : வினோத் | மீண்டும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதா ? நடிகர் ஜெயசூர்யா மறுப்பு |

கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டு நான்கு மாதங்கள் கடந்த நிலையில் தியேட்டர்கள் திறப்பதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை. ஓடிடி தளங்களில் படங்களை வெளியிடுவது தற்போதுதான் சூடு பிடித்து வருகிறது. 'ஜகமே தந்திரம், சார்பட்டா பரம்பரை' என இரண்டு பெரிய படங்கள் வெளியான நிலையில் அடுத்தடுத்து மேலும் சில புதிய படங்கள் வாரம்தோறும் வெளியாக உள்ளது.
ஓடிடி தளங்களுக்குப் போட்டியாக டிவிக்களிலும் நேரடியாக படத்தை வெளியீடு செய்வதும் பரபரப்பாக நடந்து வருகிறது. இதுவரையில் டிவியில் நேரடியாக வெளியான சில சிறிய படங்களுக்கு சுமாரான வரவேற்பு கிடைத்துள்ளது. அதையே பெரிய படங்கள் என மாற்றி பெரிய வரவேற்பை பெற சில டிவி நிறுவனங்கள் தயாராகி வருகின்றன.
அதில் தற்போது ஒரு முன்னணி டிவி, விஜய் சேதுபதி நடித்துள்ள 'துக்ளக் தர்பார்,', சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'டாக்டர்', த்ரிஷா நடித்துள்ள 'ராங்கி' உள்ளிட்ட சில படங்களை நேரடியாக டிவியில் வெளியிட பேசி வருகிறதாம். அப்படி கிடைக்காத சில படங்கள், வேறு ஓடிடி நிறுவனங்கள் வாங்கிய படங்களை உடனடியாக டிவியில் ஒளிபரப்பவும் பேசி வருகிறார்களாம்.
வினாயகர் சதுர்த்தி, ஆயுத பூஜை, தீபாவளி என வர உள்ள பண்டிகை நாட்களில் இப்படி டிவியில் நேரடியாக முதல் முறை என சொல்லுமளவிற்கு சில பெரிய படங்கள் இடம் பெறும் என கோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள்.
தியேட்டர்கள் திறக்கப்பட்டால், சில படங்கள் நம்மைக் காப்பாற்றும் என தியேட்டர்காரர்கள் நினைத்துக் கொண்டிருக்கும் படங்கள், இப்படி ஓடிடி, நேரடி டிவி என போவதைக் கண்டு தியேட்டர்காரர்கள் திகைத்துப் போயிருப்பதாகவும் தகவல்.