தள்ளிப் போகிறதா துல்கர் சல்மானின் 'காந்தா' ? | சிறிய படங்களுடன் விநாயக சதுர்த்தி ரிலீஸ் | ரஜினியின் அடுத்த பட இயக்குனர் யார் ? | 15 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் பிஜூ மேனன் | 'பிக் பாஸ்' ஹிந்தி, சீசன் 19 ஆரம்பம் | அண்ணன் அண்ணன் தான் : விஜய் குறித்து சிவகார்த்திகேயன் | ரஜினியின் ‛கூலி' படத்தின் பத்து நாள் வசூல் வெளியானது! | பிளாஷ்பேக்: அபூர்வ கலைப் படைப்பாக வந்து, ஆச்சர்யமிகு வெற்றியைப் பதிவு செய்த “அஞ்சலி”யின் அனுபவ ஞாபகங்கள் | ‛பாகுபலி தி எபிக்' படம் குறித்து ராஜமவுலி வெளியிட்ட தகவல்! | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் தியேட்டர் உரிமை குறித்த தகவல் வெளியானது! |
கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக மூடப்பட்ட தியேட்டர்களை தமிழகத்தில் இன்னும் திறக்கவில்லை. ஆனால், ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் இன்று முதல் திறந்துவிட்டார்கள்.
இன்று வெளியான 5 புதிய தெலுங்கு திரைப்படங்களும், முன்பு வெளியான சில படங்களையும், சில ஆங்கில, ஹிந்திப் படங்களையும் திரையிட்டுள்ளார்கள். 50 சதவீத இருக்கைகளுடன் அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளுடன் தியேட்டர்கள் திறக்கப்பட்டுள்ளன.
இதில் சில படங்களுக்கு 50 சதவீத இருக்கைகள் முழுமையாக நிரம்பியுள்ளது தெலுங்கு திரையுலகினரிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிங்கிள் தியேட்டர்களை விட மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் ரசிகர்கள் அதிக அளவில் வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாளை, நாளை மறுதினமும் விடுமுறை நாட்கள் என்பதால் கூட்டம் மேலும் அதிகமாகும் என எதிர்பார்க்கிறார்கள். மூன்றாவது அலை வரும் என்று ஒரு பக்கம் பேச்சுக்கள் இருந்தாலும் தெலுங்கு பேசும் இரண்டு மாநிலங்களிலும் தியேட்டர்களைத் திறந்துவிட்டதைப் போல தமிழகத்திலும் தியேட்டர்களைத் திறக்க அனுமதி கிடைக்குமா என இங்குள்ள தியேட்டர்காரர்கள் காத்திருக்கிறார்கள்.