தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், சமுத்திரக்கனி, பாக்யஸ்ரீ போர்ஸ் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'காந்தா'. அந்தக் காலத்துக் கதையாக உருவாகி உள்ள இப்படத்தை செப்டம்பர் 12ம் தேதி வெளியிட உள்ளதாக ஏற்கெனவே அறிவித்திருந்தார்கள். ஆனால், தற்போது படத்தைத் தள்ளி வைக்க முடிவு செய்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. தீபாவளிக்கு படத்தை வெளியிடலாமா என்று ஆலோசித்து வருகிறார்களாம்.
முக்கிய படங்களை வெளியிடும் தேதி பற்றிய முடிவுகளை அந்தப் படங்களின் ஓடிடி உரிமையை வாங்கும் நிறுவனங்கள்தான் தீர்மானிக்கிறது. தியேட்டர் உரிமையை விடவும் அதிக பணம் கொடுத்து அவற்றை வாங்குகிறார்கள். ஒரே வாரத்தில் பெரிய படங்களை அவர்கள் வெளியிடுவதைத் தவிர்க்கிறார்கள். ஒரு மாதத்தில் இரண்டு, மூன்று பெரிய படங்களாவது அவர்களது வெளியீட்டுப் பட்டியலில் இருக்கும்படி பார்த்துக் கொள்கிறார்கள். அதனால், தற்போது 'காந்தா' படத்தைத் தள்ளி வைக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார்களாம்.
இது பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் எனத் தெரிகிறது.