‛கில்லர்' முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ‛ஜெயிலர்-2'வில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | காரில் கோளாறு: ஷாரூக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு | ‛வார் - 2' படம் தோல்வி அடைந்ததால் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தை கைவிட்ட நிறுவனம்! | எனது சொகுசு பங்களா வீடியோவை உடனே நீக்குங்கள்! - ஆலியா பட் வைத்த ஆவேச கோரிக்கை | 23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! |
50வது சுதந்திர தினவிழா கொண்டாட்டத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் தாய்மண்ணே வணக்கம், என்ற பாடல் வெளியிடப்பட்டு இந்திய அளவில் பிரபலமானது. இதேபோன்று வரும் 75வது ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டத்தில் இந்தியாவெங்கும் இருக்கும் சுதந்திர வீரர்களின் பெருமைகளை போற்றும்படி உருவாகும் இசை ஆல்பம் பெருங்காற்றே.
இந்த ஆல்பத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைக்கிறார். இதனை சத்யம் படத்தை இயக்கிய ஏ.ஆர்.ராஜசேகர் இயக்குகிறார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். சக்ரா அறக்கட்டளை சார்பில் சக்ரா ராஜசேகர் தயாரிக்கிறார்.
இதுகுறித்து இயக்குனர் ஏ.ஆர்.ராஜசேகர், இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது: இந்த பாடல் தமிழில் தொடங்கி தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, ஒரியா, மராட்டி, பெங்காலி, போஜ்புரி, பஞ்சாபி, குஜராத்தி, கொங்கனி உள்ளிட்ட 12 மொழிகளில் தனித்தனியாக உருவாகிறது.
ஒவ்வொரு மொழி பாடலிலும் அந்த மொழியில் பிரபலமான சுதந்திர போராட்ட வீரரின் வாழ்க்கை இடம் பெறும். தமிழில் வ.உ.சிதரம்பரனாரின் வாழ்க்கை இடம்பெறுகிறது. ஒவ்வொரு மொழிக்கும் தனித்தனி பாடலாசிரியர்கள் பாடல்களை எழுதுகிறார்கள். தமிழில் அருண்ராஜா காமராஜ் எழுதுகிறார்.
இந்தியாவில் உள்ள முன்னணி திரைப்பட கலைஞர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் இப்பாடல் உருவாக்கத்தில் பங்கு கொள்ளவிருக்கிறார்கள். கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீர் வரை வரலாற்று சிறப்பு மிக்க இடங்களில் படமாக்கப்பட இருக்கிறது. இந்தியாவில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் காட்சி ஊடகங்களிலும் இப்பாடல் திரையிடப்பட இருக்கிறது. என்றார்கள்.