பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

ஒருவர் மட்டுமே நடிக்கும் படங்கள் அவ்வப்போது பரிசோதனை முயற்சியாக வெளிவரும். கடைசியாக பார்த்திபன் நடித்த ஒத்த செருப்பு படம் இந்த வகையை சேர்ந்தது. அதேபோன்ற ஒரு படத்தில் தற்போது வெயில் பிரியங்கா நடித்து வருகிறார். தமிழ், மலையாளத்தில் தயாராகும் இந்த படத்தை அபிலாஷ் புருஷோத்தமன் தயாரித்து, இயக்குகிறார். பிரதாப் நாயர் ஒளிப்பதிவு செய்கிறார், தீபன்குரன் கைதப்ரம் இசை அமைக்கிறார்.
பிரியங்கா கூறியிருப்பதாவது: ஒற்றை கதாபாத்திரத் திரைப்படங்கள் சினிமாவில் மிகவும் அரிதானவை. சவாலானது என்றாலும் அதை செய்வது ஒரு கலைஞருக்கு மன திருப்பி அளிப்பதாகும். மலையாளத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு பிராணா என்ற படத்தில் நித்யா மேனன் நடித்திருந்தார். இந்த படம் இந்தியாவில் 6 வது படமாகும். ஒரு இக்கட்டான சூழ்நிலை ஒன்றை ஒரு பெண் சந்திக்கும்போது அவள் தன்னை காப்பாற்றிக்கொள்ள என்னவெல்லாம் செய்கிறாள் என்பதுதான் படத்தின் கண்டன்ட். படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தில் உள்ளது, என்றார்.