50 வருடம் ஒருவர் சூப்பர் ஸ்டாராவே இருக்கிறாரே அதுதான் பெரிய விஷயம் ; கூலி விழாவில் சத்யராஜ் புகழாரம் | கவர்ச்சியாக நடித்தவர் கடவுளாக நடிக்கலமா? : துர்க்கை ஆக நடித்த கஸ்துாரி பதில் | மலையாளம் பிக்பாஸ் 7ல் பங்கேற்ற ஹிந்தி பிக்பாஸ் 9 போட்டியாளர் | லோகேஷ் கனகராஜின் புரமோஷன் பேட்டிகள் ; ஜாலியாக கிண்டலடித்த ரஜினிகாந்த் | மகேஷ்பாபுவை அடுத்து மல்டிபிளக்ஸ் தியேட்டர் திறந்த ரவி தேஜா | தனி நபர்களை வைத்து படப்பிடிப்பு : தெலுங்கு திரைப்பட வர்த்தக சபை அறிக்கை | வாழ்த்து சொன்ன மோகன்லால் ; சந்திக்க நேரம் கேட்ட ஷாருக்கான் | பழம்பெரும் நடிகர் பிரேம் நசீர் மகன் ஷானவாஸ் காலமானார் | தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு |
சினிமாவில் பிரசித்தி பெற்ற பாடல்களை படக்காட்சிகளை ஒரு காலத்தில் அப்படியே கிண்டலடித்து வீடியோக்களாக வெளியிட்டு வந்தனர். ஆனால் தற்போது சினிமாவிற்கு சற்றும் குறையாத வகையில் அதே மெனக்கெடலோடு அந்த காட்சிகளில் நடித்து, காண்பவர்களை ஆச்சரியப்படுத்தி வருகிறார்கள் இந்த கால இளைஞர்கள் சிலர். அப்படி சமீபத்தில் ஜகமே தந்திரம் படத்தின் ஆக்ஷன் காட்சி ஒன்றும், அதைத்தொடர்ந்து சூர்யா நடித்த அயன் படத்தில் இடம்பெற்ற பாடல் காட்சி ஒன்றும் இதுபோல ஹிட்டானது.
குறிப்பாக அயன் படத்தில் இடம்பெற்ற பளபளக்குற பகலா நீ என்கிற பாடலை திருவனந்தபுரம் ராஜாஜி நகர் காலனியை சேர்ந்த டீன்ஏஜ் பையன்கள் சிலர் ரொம்பவே ஆர்வத்துடனும், நேர்த்தியுடனும் ஆடி நடித்திருந்தனர். சமீபத்தில் சோசியல் மீடியாவில் வைரலாக இந்த வீடியோவை பார்த்து நடிகர் சூர்யாவும் தனது பாராட்டை தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் பிரபல மலையாள இயக்குனர் கண்ணன் தாமரக்குளம் என்பவர் தற்போது தான் இயக்கி வரும் விருன்னு என்கிற படத்தில் இந்த இளைஞர்கள் அனைவருக்கும் வாய்ப்பு கொடுத்துள்ளார். இவர்களை வைத்து கிட்டத்தட்ட 10 நாட்கள் படப்பிடிப்பும் நடத்தியுள்ளார்கள். இவர்களுக்கு படத்தில் முக்கிய காட்சிகள் முதல் கிளைமாக்ஸ் வரை முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது என்று கூறுகிறார் இயக்குனர் கண்ணன் தாமரக்குளம். இவர் தான் ஜெயராம், ரம்யா கிருஷ்ணன் நடித்த ஆடுபுலி ஆட்டம் என்கிற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.