ஆந்திரா மதுபான ஊழல் ; விசாரணை வளையத்தில் நடிகை தமன்னா : கோலிவுட் போல் டோலிவுட்டும் கலக்கம் | 3 மணி நேரம் ஓடப் போகும் 'வார் 2' | வாழ்க்கை என்பது ஒரு வட்டம் ; ராஷி கண்ணாவின் புதிய மகிழ்ச்சி | ஸ்வேதா மேனன் மீது எப்ஐஆர் பதிவு ; நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிட விடாமல் தடுக்கும் முயற்சியா? | நீங்க எனக்கு இன்ஸ்பிரேசன் : சிம்ரனை பாராட்டிய திரிஷா | இதுவே உங்கள் மகளாக இருந்தால் என்ன செய்வீர்கள் ? மம்முட்டியிடம் கேள்வி எழுப்பிய பெண் தயாரிப்பாளர் | இதைவிட பெருமை என்ன இருக்கு : முதல்வர் சந்திப்பு குறித்து நடிகை எம்.என்.ராஜம் நெகிழ்ச்சி | தனுஷின் சகோதரிகளை இன்ஸ்டாகிராமில் பின்தொடரும் மிருணாள் தாக்கூர் | 'புஷ்பா 2' தியேட்டர் நெரிசல் விவகாரம்: மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் | தலைவன் தலைவி சக்சஸ் மீட் எப்போது |
மலையாளத்தில் பஹத் பாசில் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் தொண்டிமுதலும் திரிக்சாட்சியும். இந்தப்படத்தின் கதையை சஜீவ் பழூர் என்பவர் எழுதியிருந்தார். தற்போது திலீப் அறுபது வயது கிழவராக வித்தியாசமான தோற்றத்தில் நடித்துவரும் 'கேசு ஈ வீட்டிண்டே நாதன் என்கிற படத்திற்கும் இவர் தான் கதை எழுதியுள்ளார். மலையாள கதாசிரியர் என்றாலும் தற்போது, இவர் தமிழில் யோகிபாபு கதாநாயகனாக நடிக்கும் படம் மூலம் இயக்குனராக அடியெடுத்து வைக்கிறார். இந்தப்படத்தில் ஊர்வசி முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் மம்முட்டி நடிப்பில் வெளியான வரலாற்று படமான மாமாங்கம் படத்தின் கதையை எழுதிய இவரே, அந்தப்படத்தை இவரே சில நாட்கள் இயக்கினார். ஆனால் தயாரிப்பாளருக்கும் இவருக்கும் இடையே ஏற்பட்ட ஈகோ மோதலால் அந்தப்படத்தில் இருந்து நீக்கப்பட்ட இவர் தற்போது தமிழில் இயக்குனராக அறிமுகமாவது ஆச்சரியாமான ஒன்று தான்.