2026 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் விஷாலின் 'மகுடம்'! | காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! | அருள் நிதியின் 'டிமான்டி காலனி -3' படத்தின் போஸ்டர் வெளியானது! | வித் லவ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | புத்தாண்டு பிறந்தாச்சு..... ஓடிடியில் புதுப்படங்களும் வரிசை கட்ட ஆரம்பிச்ச்சாச்சு....! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை வெளியீடு | 'சல்லியர்கள்' படத்தை திரையிட தியேட்டர் இல்லை: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வேதனை | ரஜினிகாந்த்தின் ஆசைகள் 2026ல் நிறைவேறுமா? | இளையராஜா இசையில் பாடிய அறிவு, வேடன் | சென்னை பெரம்பூர் பின்னணி கதையில் ரோஜா |

மலையாளத்தில் பஹத் பாசில் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் தொண்டிமுதலும் திரிக்சாட்சியும். இந்தப்படத்தின் கதையை சஜீவ் பழூர் என்பவர் எழுதியிருந்தார். தற்போது திலீப் அறுபது வயது கிழவராக வித்தியாசமான தோற்றத்தில் நடித்துவரும் 'கேசு ஈ வீட்டிண்டே நாதன் என்கிற படத்திற்கும் இவர் தான் கதை எழுதியுள்ளார். மலையாள கதாசிரியர் என்றாலும் தற்போது, இவர் தமிழில் யோகிபாபு கதாநாயகனாக நடிக்கும் படம் மூலம் இயக்குனராக அடியெடுத்து வைக்கிறார். இந்தப்படத்தில் ஊர்வசி முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் மம்முட்டி நடிப்பில் வெளியான வரலாற்று படமான மாமாங்கம் படத்தின் கதையை எழுதிய இவரே, அந்தப்படத்தை இவரே சில நாட்கள் இயக்கினார். ஆனால் தயாரிப்பாளருக்கும் இவருக்கும் இடையே ஏற்பட்ட ஈகோ மோதலால் அந்தப்படத்தில் இருந்து நீக்கப்பட்ட இவர் தற்போது தமிழில் இயக்குனராக அறிமுகமாவது ஆச்சரியாமான ஒன்று தான்.