திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
பெரிய திரையில் இருந்து சின்னத்திரைக்கு ஹீரோயின்கள் வந்த காலம் மாறி இப்போது சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு ஹீரோயின்கள் சென்று கொண்டிருக்கிறார்கள். வாணி போஜன், ப்ரியா பவானி சங்கர் ஆகியோர் சமீபத்திய உதாரணங்கள்.
இவர்கள் வரிசையில் இப்போது சரவணன் மீனாட்சி புகழ் ரக்ஷிதா மகாலட்சுமியும் ஹீரோயின் ஆகிறார். பிரிவோம் சந்திப்போம் தொடரில் அறிமுகமான இவர் அதன் பிறகு இளவரசி, நாச்சியார், நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் நடித்தார். தொடர்ந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மிஸ்டர் அண்ட் மிஸ்சஸ் கில்லாடி, ஜூனியர் சினியர் போன்ற பல ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டார்.
ஏற்கெனவே பாரிஜாதா என்ற கன்னட படத்திலும், உப்புகருவாடு என்ற தமிழ் படத்திலும் இரண்டாவது நாயகியாக நடித்தவர் , இப்போது கன்னட படம் ஒன்றின் மூலம் ஹீரோயின் ஆகிறார்.