மீண்டும் காதல் கிசுகிசுவில் சிக்கிய தனுஷ் | அமெரிக்க முன்பதிவு : 'வார் 2'ஐ பின்னுக்குத் தள்ளி முந்தும் 'கூலி' | கமல் தயாரிப்பில் அண்ணன், தம்பி நடிப்பார்களா? | ரசிகர்களுடன் போட்டோ, விருந்து : தனுஷ் மாறியது ஏன் | மாளவிகா மோகனனின் பிறந்தநாளுக்கு போஸ்டர் வெளியிட்டு அசத்திய மும்மொழி பட குழுவினர் | 50 வருடம் ஒருவர் சூப்பர் ஸ்டாராவே இருக்கிறாரே அதுதான் பெரிய விஷயம் ; கூலி விழாவில் சத்யராஜ் புகழாரம் | கவர்ச்சியாக நடித்தவர் கடவுளாக நடிக்கலமா? : துர்க்கை ஆக நடித்த கஸ்துாரி பதில் | மலையாளம் பிக்பாஸ் 7ல் பங்கேற்ற ஹிந்தி பிக்பாஸ் 9 போட்டியாளர் | லோகேஷ் கனகராஜின் புரமோஷன் பேட்டிகள் ; ஜாலியாக கிண்டலடித்த ரஜினிகாந்த் | மகேஷ்பாபுவை அடுத்து மல்டிபிளக்ஸ் தியேட்டர் திறந்த ரவி தேஜா |
தமிழ்த் திரையுலகத்தில் குறிப்பிடத்தக்க இயக்குனர்களில் ஒருவர் கவுதம் மேனன். இப்போதைய இயக்குனர்களில் காதல் படங்களின் ஸ்பெஷல் இயக்குனர் என தாராளமாகக் குறிப்பிடலாம். இளம் தலைமுறை இயக்குனர்கள் சிலர் புதிதாக வந்தாலும் இருபது வருடங்களாக இன்றைய தலைமுறை ரசிகர்கள் ரசிக்கும் விதத்திலும் காதலைச் சொல்லி வருபவர்.
'காக்க காக்க, வாரணம் ஆயிரம், விண்ணைத் தாண்டி வருவாயா' படங்கள் பல காதல் படங்களுக்கு இன்ஸ்பிரேஷன் என்றால் அது மிகையில்லை. இப்படி சில பல சாதனைகளுக்குச் சொந்தக்காரரான கௌதம் மேனன் கடந்த சில வருடங்களாக தடங்கல்களால் தடுமாறிக் கொண்டிருக்கிறார்.
'என்னை அறிந்தால்' படத்திற்குப் பிறகு அவரது இயக்கத்தில் வந்த 'அச்சம் என்பது மடமையடா, எனை நோக்கி பாயும் தோட்டா' ஆகிய படங்கள் படப்பிடிப்பு ஆரம்பமாகி சில வருடங்கள் இ......ழுத்து, பிறகே வெளிவந்தன.
தற்போது அவரது இயக்கத்தில் 'ஜோஷ்வா இமை போல் காக்க, துருவ நட்சத்திரம்' ஆகிய படங்களும் முடிந்தும், முடியாமலும் திரையைப் பார்க்காமல் தவித்து வருகின்றன. அதற்குத் தீர்வு காணாமல் அடுத்ததாக சிம்பு கதாநாயகனாக நடிக்க 'நதிகளிலே நீராடும் சூரியன்' படத்தை ஆரம்பிக்கத் தயாராக இருந்தார்.
சொல்லி வைத்தாற் போல அந்தப் படம் ஆரம்பமாவதற்கு முன்பே சிக்கலை சந்திக்கத் தயாராகிவிட்டது. சிம்பு சம்பந்தப்பட்ட 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' பட பிரச்சினையால் கவுதம் மேனன், சிம்பு மீண்டும் இணையும் 'நதிகளிலே நீராடும் சூரியன்' படத்தைத் திட்டமிட்டபடி ஆரம்பிக்க முடியவில்லை.
ஏற்கெனவே, இரண்டு படங்கள் சிக்கலில் தவித்துக் கொண்டிருக்கும் போது, புதிய படமும் இப்படி சிக்கலை நோக்கி இருக்கிறதே என திரையுலகத்தில் உள்ள சிலர் இப்போது அனுதாபப்பட ஆரம்பித்துவிட்டார்கள்.