தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து முன்னணி நடிகையாக விளங்கியவர் ரோஜா. ரஜினிகாந்த் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகை ரோஜா கடந்த பல ஆண்டுகளாக ஆந்திர மாநில அரசியலில் பரபரப்பாக இயங்கி வருகிறார். நகரி தொகுதியில் இருந்து அவர் இரண்டு முறை எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு நம்பிக்கைக்கு உரியவராக இருந்து வரும் நடிகை ரோஜா, அவ்வப்போது தனது சொந்த தொகுதியான நகரி தொகுதியில் சென்று நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் அவர் நகரி தொகுதியில் உள்ள பறை இசைக் கலைஞர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கினார்.
அப்போது பறை இசைக் கலைஞர்களின் இசையை அவர் சிறிது நேரம் ரசித்துக் கொண்டிருந்தார். இந்த நிலையில் நடிகை ரோஜா ஒரு கட்டத்தில் திடீரென்று எழுந்து அவரே பறை இசையை இசைக்க தொடங்கினார். இசைக் கலைஞர்களுடன் நடிகை ரோஜா பறையிசை இசைத்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன. கடந்த ஆண்டு இதேபோல் ரோஜா மாணவர்களுடன் கபடி விளையாடிய வீடியோ வைரலானது.