பிளாஷ்பேக் : நம்பியாரை நாயகன் ஆக்கிய 'கல்யாணி' | மலைவாழ் மக்களின் கல்வியை வலியுறுத்தும் 'நறுவீ' | பிரபல டிசைனர் குமார் காலமானார் | ‛கூலி, வார் 2' ஜெயிப்பது யார்? | கூலி : ஆந்திராவில் மட்டுமே டிக்கெட் கட்டண உயர்வுக்கு அரசு அனுமதி | ஸ்ரீதேவியின் பிறந்தநாளில் அவரை நினைவுகூர்ந்த போனி கபூர் | அடுத்தடுத்து தோல்வி படங்கள் : கீர்த்தி சுரேசுக்கு ரிவால்வர் ரீட்டா கை கொடுக்குமா? | ‛சக்தித்திருமகன்' ரிலீஸ் தேதி மாற்றம் | திரையுலகில் 50 ஆண்டுகள் : ரஜினிகாந்த்துக்கு உதயநிதி, இபிஎஸ், பிரேமலதா வாழ்த்து | 'எக்ஸ்க்ளுசிவ் ஒப்பந்தம்' : 'வார் 2' செய்வது சரியா ? |
லைக்கா புரொடக்ஷன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படம் டான். அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்குகிறார். சிவகார்த்திகேயன், எஸ்.ஜே.சூர்யா, பிரியங்கா அருள் மோகன், சமுத்திரனி, சூரி உள்பட பலர் நடிக்கிறார்கள்.
இந்த படத்தின் படப்பிடிப்புகள் கொரோனாவால் தடைபட்டிருந்தது. தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதன் படப்பிடிப்புகள் பொள்ளாச்சி அருகில் உள்ள ஆனைமலை பாலம் பகுதிகளில் நடந்து வருகிறது.
இந்த படப்பிடிப்பில் சிவகார்த்திகேயன், நாயகி பிரியங்கா அருள் மோகன், சூரி, ஷிவாங்கி, ஆர்ஜே விஜய் உள்பட பலர் கலந்து கொண்டு நடித்து வருகின்றனர். படப்பிடிப்பு பற்றி கேள்விப்பட்ட அக்கம் பக்கத்து ஊர் பொதுமக்கள் நூற்றுக் கணக்கில் வேடிக்கை பார்க்க திரண்டு விட்டனர். அவர்கள் யாரும் முககவசம்கூட அணிந்திருக்கவில்லை.
இதுகுறித்து தகவல் அறிந்த ஆனைமலை தாசில்தார் விஜயகுமார் தலைமையிலான அதிகாரிகள் படப்பிடிப்பு தளத்திற்கு சென்று படப்பிடிப்பை நிறுத்த உத்தரவிட்டனர். பின்னர் போலீஸ் உதவியுடன் அங்கு கூடிய மக்களை கலைந்து போகச் செய்தனர். படப்பிடிப்புக்கு முறையான அனுமதி பெறப்பட்டுள்ளதா. படப்பிடிப்பில் கலந்து கொண்டவர்கள் தடுப்பூசி போட்டுள்ளனரா என்று அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.