வசூல் கொட்டுது... : 10 நாளில் ரூ.552.70 கோடியை குவித்த ‛துரந்தர்' | ஹனி ரோஸின் ‛ரேச்சல்' படம் ரிலீஸ் ஒத்திவைப்பு | அரசு பேருந்தில் திரையிடப்பட்ட திலீப் திரைப்படம் ; பெண் பயணியின் எதிர்ப்பால் நிறுத்தம் | புத்தாண்டு தினத்தில் அஜித் 64வது பட அறிவிப்பு வெளியாகிறதா? | நான் அழுதால் நீங்கள் சிரிப்பீர்கள் ; சல்மான்கான் வெளிப்படை பேச்சு | கருப்பு படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் சேனல் | மதுப்பழக்கம் துவங்கியது புகுந்த வீட்டில் தான்; நடிகை ஊர்வசி | எம்ஜிஆர் நினைவுநாளில் 'வா வாத்தியார்' வருகிறார்…??? | தயாரிப்பாளர்கள் இல்லாமல் நடந்த 'அகண்டா 2' சக்சஸ் மீட் | பலாத்காரத்துக்கு திட்டமிட்டவர்களும் தண்டிக்கப்பட வேண்டும் : மஞ்சு வாரியர் |

கொரானோ தொற்று பரவல் காரணமாக உலகமே தத்தளித்துக் கொண்டிருக்கிறது. சில நாடுகளில், சில நகரங்களில் மட்டும் இயல்பான நிலை காணப்படுகிறது. தனி நபர் போக்குவரத்து, பொது போக்குவரத்து ஆகியவை இன்னும் பழைய நிலைக்குத் திரும்பவில்லை. உலகம் முழுவதும் உள்நாட்டு, வெளிநாட்டு விமான சேவைகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சுற்றுலா பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு விமான சேவைகளைக் கூட பலர் பயன்படுத்தி வருகின்றனர். அதே சமயம் வெளிநாட்டு விமான சேவைகள் முன்பைப் போல இன்னும் ஆரம்பமாகவில்லை.
நடிகர் மாதவன், சற்று முன் இன்ஸ்டாகிராம் தளத்தில் சில வீடியோக்களைப் பதிவிட்டுள்ளார். ஜுலை 26ம் தேதியன்று 'அமெரி கி பன்டிட்' படப்பிடிப்பு, வேடிக்கையாக ஆனால், சோகமாக. இது சீக்கிரமே முடிவடைய பிரார்த்திக்கிறேன். அதனால், அன்பானவர்கள் ஒருவருக்கொருவர் ஒன்றாக இருக்கலாம்,” என்று குறிப்பிட்டுள்ளார். துபாய்க்கு அவர் சென்ற விமானத்தில் அவர் ஒருவர் மட்டுமே பயணித்துள்ளார். விமான நிலையம், விமானநிலைய ஓய்வறை, விமானத்திற்குள் என அவர் மட்டுமே இருக்கிறார். அவ்வளவு இருக்கைகள் கொண்ட விமானத்தில் மாதவன் மட்டுமே பயணித்தாரா என்பது ஆச்சரியமாக உள்ளது.
“எப்படி அவ்வளவு இருக்கைகள் காலியாக உள்ளன, ஒரு விதமான பயமாக உள்ளது,”, “நம்ப முடியாத ஒன்று”, “சினிமாவில் வரும் காட்சி போல உள்ளது, விமான நிலையம், விமானத்தில் தன்னந்தனியாக”, “இது நகைச்சுவையாக உள்ளது, எத்தனை இருக்கைகள் வேண்டுமானால், நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்,” என ரசிகர்களும் ஆச்சரியத்துடன் கமெண்ட் செய்துள்ளனர். இன்ஸ்டாகிராம் பதிவை டுவிட்டரில் பகிர்ந்து, “இதுவரையில் இல்லாத வித்தியாசமான விமானம்,” எனக் குறிப்பிட்டுள்ளார் மாதவன்.




