ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை |

போதை பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றவர் சஞ்சான கல்ராணி. தமிழில் நடிக்கும் நிக்கி கல்ராணியின் சகோதரி. தற்போது ஜாமினில் விடுதலையாகி உள்ள சஞ்சனா கல்ராணி நடிப்பில் தீவிரமாக இறங்கி உள்ளார்.
கன்னடம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வந்த சஞ்சனா கல்ராணி தற்போது மலையாளத்தின் பக்கமும் கவனம் செலுத்துகிறார். மோகன்லால் நடிக்கும் ஆராட்டு படத்தில் சிறிய கேரக்டரில் நடிக்கும் சஞ்சனா கல்ராணி, டாக்டர் பிரவீன் ராணா நடிக்கும் படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.
இதுகுறித்து சஞ்சனா கூறியிருப்பதாவது: கடவுள் ஒரு கதவை மூடும்போது இன்னொரு கதவை திறப்பார் என்பார்கள். என் விஷயத்தில் அது மிகவும் உண்மை. கடந்த ஆண்டு நிறைய கதவுகளை மூடினார். இப்போது நிறைய கதவுகளை திறக்கிறார். வாழ்க்கையின் இருண்ட பகுதியை பார்த்துவிட்டேன். அதனால் நான் பயந்துவிடவில்லை. முன்பை விட தன்னம்பிக்கையோடு இருக்கிறேன். கடவுளிடம் இருந்து எனக்கு நியாய தீர்ப்பு கிடைக்கும். என்கிறார்.